விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏக மூர்த்தி இரு மூர்த்தி*  மூன்று மூர்த்தி பல மூர்த்தி- 
    ஆகி,*  ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,* 
    நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற*  நாராயணனே உன்- 
    ஆகம் முற்றும் அகத்து அடக்கி*  ஆவி அல்லல் மாய்த்ததே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏகம்மூர்த்தி - காரணபூதமான ஒரு மூர்த்தியாய்
இரு மூர்த்தி - (ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலே) ப்ரக்ருதி மஹான்களைச் சரீரமாகக்கொண்டு நிற்கும் மூர்த்தியாய்
மூன்று மூர்த்தி - ஸாத்லிகமாயும் ராஜஸமாயும் தாமஸமாயும் மூன்று வகைப்பட்ட அஹங்காரத்தை வடிவமாகக் கொண்ட மூர்த்தியாய்
பல மூர்த்தி ஆகி - மநஸ் முதலிய கரணங்களை வடிவாகவுடையனாய்

விளக்க உரை

கீழ்த்திருவாய்மொழியில் தமக்குண்டான ஆற்றாமை தீரப்பெற்றமையை இங்கருளிச்செய்கிறார். ஏகமூர்த்தி-ஸ்ருஷ்டிக்கு முன்பு ஸூக்ஷ்ம சிதசித்விசிஷ்டனாய்க் கொண்டு ஒரே மூர்த்தியாக இருக்குமிருப்பை அருளிச் செய்தபடி. இருமூர்த்தி ஸ்ருஷ்டியிலே உந்முகனாய் ப்ரக்ருகதி மஹாந் என்ற இரண்டு தத்துவங்களையும் சரீரமாகக் கொண்டு நிற்கிற நிலையைச் சொன்னபடி. மூன்றுமூர்த்தி ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்று மூன்றுவகைப்பட்ட அஹங்காரமென்கிற தத்துவத்தைச் சரீரமாகக்கொண்டு நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. பலமூர்த்தியாகி ஐந்துபூதமாய் ஸாத்விகாஹங்காரத்தின் காரியமான பதினோரிந்திரியங்களையும் தாமஸாஹங்காரத்தின் காரியமான நிலம் நீர் தீ கால் விசும்பு என்கிற பஞ்ச பூதங்களையும் சரீரமாகக் கொண்டிருக்கும்படியைச் சொன்னபடி. ஏகமூர்த்தி-பரவாஸூதேவமூர்த்தி; இருமூர்த்தி-பரவாஸூதேவன் வ்யூஹ வாஸூதேவன் ஆகிற இரண்டு மூர்த்தி. மூன்றுமூர்த்தி-ஸங்கர்ஷண அநிருத்த ப்ரத்யும்ந மூர்த்திகள். பலமூர்த்தி-“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிற அநேக விபவாவதார மூர்த்திகள் என்றுரைப்பாருமுண்டு. இரண்டுசுடராய் ஸூர்ய சந்திரர்களைச் சொல்லுகிறது; இவ்விருவரைச் சொன்னது கார்யவர்க்கங்க ளெல்லாவற்றுக்கும் உபலக்ஷணம்.

English Translation

O Narayana! You become the one, the Two, the Three, and the Many, then the five elements, the twin orbs, and all the souls. Then you mounted a serpent and slept in the ocean! By filling your presence into my body my soul has overcome its misery.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்