- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஹேயகுணம் மலிந்த நீசரை விட்டு, ஸமஸ்தகல்யாண குணாத்மகனாய் நம் அபேக்ஷிதமெல்லாம் தரவல்லவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோளென்கிறார். பிறரைக் கவி பாடுவது ஒரு பிரயோஜனத்திற்காகவேயன்றி ஸ்வயம் ப்ரயோஜனமாகவன்றே; அப்படி நீங்கள் கருதுகிற பிரயோஜனம் பெறுவதில்லை என்று முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார்-பாவிகள் உள்ளத்திற்பதிவதற்காக. பயனில்லை யென்பது மாத்திரமன்று; இழவுமுண்டு என்கிறார் மேல். (குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை யிழக்கும் புலவீர்காள்!.) நீங்கள் வாய் பெற்ற பேற்றை இழக்குமத்தனையே யுள்ளது என்கிறார். குப்பைகளைச் கிளறினால் கெடுதலான அம்சங்கள் தென்படுமே யல்லது நன்றானதொன்றும் தென்படமாட்டாது; அதுபோல நீசர்களின் சரிதைகளைக் கவிபாடப்புகுந்தால் மறைந்து கிடக்கும் மாசுகள் தாம் வெளிவரும் என்று அநுபவத்திற்குப் பொருத்தமான அருளிச் செய்கிற அழகு காண்மின்.
English Translation
O Poets with mastery over words! You waste it in praising vile useless trash as great fortune! Come and praise the benevolent Lord-most-perfect. He shall provide for your needs without diminishing.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்