விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடி ஆர்ந்த வையம் உண்டு*  ஆல் இலை அன்னவசம் செய்யும,* 
    படி யாதும் இல் குழவிப்படி*  எந்தை பிரான் தனக்கு,* 
    அடியார் அடியார் தம்*  அடியார் அடியார் தமக்கு* 
    அடியார் அடியார் தம்*  அடியார் அடியோங்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆல் இலை - ஆலந்தளிரில்
அன்னவசம் செய்யும் - திருக்கண் வளர்ந்தருள்கின்ற
படி ஆதும்இல் - சிறிதும் உபமானமில்லாத
குழவிப் படி - சிறு குழந்தைப் பருவமுடைய
எந்தை பிரான் தனக்கு - எம்பெருமானுக்கு

விளக்க உரை

இவ்வுலகத்தை ஒருகால் அளந்தருளி ஒருகால் உண்டருளி ஆலிலையில் கண்வளர்ந்தருளின பெருமானுடைய திருக்குணங்களுக்குத்தோற்று அடிமையாயிருப்பாருடைய தாஸாநுதாஸ சரமாவதிதாஸன் அடியேன் என்கிறார். - அடியார்ந்தவையமுண்டு=எம்பெருமான் அமுது செய்த வுலகம் அவன்றனது திருவடியளவேயானது. என்று ரஸோக்தியாகச் சொல்வதற்குப் பாங்காக மூலம் அமைந்திருக்கிறபடி. “தன்படிக்குக் காற்கூறும் போராதத்தையிறே அமுது செய்தது” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்க. பிரளயங்கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே வைத்துநோக்கி ஓர் ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருள்வதாக நூற்கொள்கையாதலால் ஆலிலையன்னவசஞ் செய்யும் என்றார். வயிறார உண்டதனால் வரும் உறக்கம் அன்னவசம் எனப்படும். படி ஆதுமில்குழவிப்படி = ஆலமாமரத்தினிலைமேல் துயின்ற பாலகனுக்கு எசோதை யிளஞ்சிங்கமும் ஒப்பன்று என்பர். அகடித கடநாஸாமர்த்தியத்தில் ஒப்பில்லாமை கூறியவாறு. எந்தையிரான்தனக்கு= இந்த அகடிதகடநாஸாமர்த்தியத்தைக் காட்டி என்னையீடுபடுத்திக்கொண்ட எம்பெருமானுக்கு என்றபடி. (அடியார் இத்யாதி) எம்பெருமான் சேஷித்வத்தின் எல்லையிலே நிற்பதுபோல, தாம் சேஷத்வத்தின் எல்லையிலே நிற்க விரும்புகிறார். *த்வத்ப்ருத்ய ப்ருத்யபரிசாரகப்பருத்யப்பருத்யப்பருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோகநாத* என்ற முகுந்தமாலையும் காண்க.

English Translation

My Lord swallowed the Earth and slept as a child floating on a fig leaf in the deluge waters. The servant of his servant is my Master.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்