விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாட்டாதே ஆகிலும்*  இம் மலர் தலை மாஞாலம்,*  நின் 
    மாட்டு ஆய மலர்புரையும்*  திருவுருவம் மனம் வைக்க* 
    மாட்டாத பலசமய*  மதி கொடுத்தாய், மலர்த்துழாய்* 
    மாட்டேநீ மனம் வைத்தாய்*  மாஞாலம் வருந்தாதே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலர்தலை - திருநாபிக்கமலாத்தைத் தலையிடமாகக் கொண்டு தோன்றிய
இம் மா ஞாலம் - இப்பெரிய வுலகமானது
நின் மாடு ஆய - உன்னுடைய  ஸ்வரூபத்தைப் பற்றியதான
மலர் புரையும் திரு உருவம் - பூப்போலழகிய திவ்யமான விக்ரஹத்திலே
மனம் வைக்க மாட்டாதே ஆகிலும் - ஈடுபட முடியாதபடி யிருக்கச் செய்தேயும்

விளக்க உரை

உரை:1

மலரில் பிறந்த பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த பேருலகத்தில் வாழ்பவர்கள் எல்லாம் மலர் போன்ற உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும் படியாக பற்பல சமயங்களையும் ஆக்கி வைத்தீர்! அவர்களைக் கடைத்தேற்றும் வழியைக் காணாமல் நீர் உமது திருமேனியிலும் திருவடிகளிலும் திருமுடியிலும் இருக்கும் மலர்த்துழாய் மேலே மனம் வைத்தீர்! இப்படி இருந்தால் இம்மாஞாலத்து மக்கள் வருந்த மாட்டார்களா? 

உரை:2

“கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே” என்றார் கீழ்ப்பாட்டில் அது, புத்திபூர்வமாகச் சொல்லமாட்டாமையைத் தெரிவித்தபடி. அழகருடைய அழகுதானே பேசுவிக்கப் பேசுகிறாரிதில். இம்மலர்தலை மாஞாலம் நின்மாட்டாய மதிகொடுத்தாய் - என்கிற வரையில் ஒரு வாக்கியம். இவ்வுலகமானது இயற்கையாகவே தேவரீருடைய திவ்யமங்கள் விக்ரஹத்தில் செநஞ்சைச் செலுத்தமாட்டாதது; அதற்குமேலே தேவரீரும் அறிவைக்கெடுக்கவல்ல பல மதாந்தரங்களையும் விரவர்த்தனம் செய்துவைத்தீர் என்றபடி. ஒன்றோடொன்று சேராத பலபல அவைதிக மதகங்களைத் தேவரீர் உலகில் பிரவர்த்திப்பித்ததனால் ஏற்கனவே பகவத் விஷயத்தில் ருசியற்ற ஜனங்களை பின்னையும் இதர விஷயங்களில் மண்டி மாண்டு போவதற்கு வழி செய்ததாயிற்று என்றவாறு. மலர்த்துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய் = கெட்டுப்போகிற ஜனங்களை மீட்பதிலேயாவது தேவரீருடைய திருவுள்ளம் ஊற்றமுற்றிருந்தால் குறையில்லையாகும்; பாழும் ஜனங்களைத் தேவரீர் கவனியாமல், திருமேனியிலுள்ள திருத்துழாய் மாலை முதலிய போக்ய வஸ்துக்களிலே தேவரீர் ப்ராவண்யம் கொண்டிராநின்றது. இப்பாடியாகில் மாஞாலம் வருந்தாதே?= உலகமெல்லாம் வேதரீரை இழந்துபோகவேண்டியதுதானே. விபரீத மதங்களை உலகில் பரவச்செய்யாதிருந்தால் அவ்வளவாக ஜனங்கள் கெட்டுப்போக ப்ரஸக்தியிராது; “வணங்குந் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால் வணங்கும் சமயம் பலபலவாக்கி அவையவைதோறு அணங்கம் பலபல வாக்கி” என்னும்படியாகப் பலசமய பேதங்களை யுண்டாக்கிவைத்தீர்; அதனால் ஜனங்கள் பலவகையாகப் பாழ்பட நேர்ந்தது; பாழ்பட்டாலும் திருத்தும் வழியிலே தேவரீர் ஊக்கம் கொண்டிருந்தாலாவது நன்றாகும்; அதுவுமில்லாமே ஸ்வகோய்தையை யநுபவிப்பதிலேயே தேவரீர் ப்ரவணராயிருக்கையாலே இவ்வுலகம் இழந்தே போக வேண்டியதாயிற்றே! என வருந்திக் கூறியவாறு.

 

English Translation

This world does not see the radiance of your frame. You distracted men with thoughts and let them roam, while yourself enjoying the thought of cool Tulasi. O, Lord, does not the world stand to lose by this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்