விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முடிச்சோதியாய்*  உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,* 
    அடிச்சோதி நீநின்ற*  தாமரையாய் அலர்ந்ததுவோ,*
    படிச்சோதி ஆடையொடும்*  பல் கலனாய்,*  நின்பைம்பொன் 
    கடிச்சோதி கலந்ததுவோ?*  திருமாலே! கட்டுரையே. (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருமாலே - ச்ரியாபதியான எம்பெருமானே!
உனது முகம் சோதி - உன்னுடைய திருமுகமண்டலத்தின் ஜ்யோதிஸ்ஸானது (உயர்முகமாகவளர்ந்து)
முடிசோதி ஆய் - திருவபிஷேக ஜ்யோதிஸ்ஸாய்
மலர்ந்ததுவோ - விகஸிதமாயிற்றோ?
அடிசோதி - திருவடிகளின் காந்தியானது

விளக்க உரை

உரை:1

திருமாலிருஞ்சோலையழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திவ்ய பூஷணங்களுக்குமுண்டான மிக்க பொருத்தத்தைக் கண்டு உள்குழைந்து பேசுகிறார். இவ்வடிவழகைக் கண்டவளவிலே தமக்கொரு ஸந்தேஹம் விளைந்தபடியை விண்ணப்பஞ் செய்து-, பிரானே! இந்த ஸந்தேஹந்தீர மறுமாற்றமருளிச் செய்யவேணுமென்கிறார். உனது முகச்சோதி முடிச்சோதியாய் மலர்ந்ததுவோ? = திருமுக மண்டலத்தின் காந்திஸமூஹம் மேல்முகமாகக் கிளர்ந்து கிரீட ஜ்யோதிஸ்ஸாக ஆயிற்றோ? என்பது கேள்வி. உண்மையில் திருமுகமண்டலத்திக்குமேல் திருவபிஷேகமென்று தனியே இல்லை; திருமுகச் சோதிதான் மேலே படர்ந்து திருமுடியாகத் தோற்றுகிறது என் கை இங்கு ஆழ்வாருக்கு விவக்ஷிதம். பட்டர் ஸ்ரீ ரங்கராஜஸ்வத்தில் இப்பாசுரத்தின் முதலடியை ஒரு சிறுச்லோகமாக அருளிச் செய்தார்; அதாவது * கிரீடசூடரத்தராஜி: ஆதிராஜ்ய ஜல்பிகா, முகேந்தகாந்திருந்முகம் தரங்கி தேவ ரங்கிண: * என்பதாம். திருமுடியில் நின்றும் திருவடியிலே கண்வைத்தார்; அடிச்சேரி தீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? என்கிறார். ஆஸனபத்மமென்று கீழே தனியே ஒன்று இல்லை; கீழ்நோக்கிக் கிளர்ந்த திருவடியின் தேஜ: புஞ்சமே ஆஸநபத்மமாகத் தென்படுகின்றது என்கை இங்கு விஷக்ஷிதம். 

உரை:2

             பெரியபிராட்டியாருடன் என்றும் நீங்காது இருக்கும் திருமாலே! உமது திருமுகத்தின் ஒளியே மேலே கிளம்பி உம் தலையில் நீர் தரித்திருக்கும் திருவபிஷேகமாக (கிரீடமாக/திருமுடியாக) ஒளிவீசித் திகழ்கிறதோ? நீர் தேவ தேவன் என்பதையும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்பதையும் பரமபுருஷன் என்பதையும் உமது திருமுடியின் பேரழகும் பேரொளியும் காட்டுகின்றதே! நீரே எம்மையுடையவர்! உமது திருவடிகளே சரணம்! சரணம்! ஆகா! திருமுடி பரமேஸ்வரன் என்று ஒளிவீசிக் காட்டுகின்றதே என்று திருவடிகளையடைய வந்தேன்! அடியேனுக்கே உரிய அந்தத் திருவடிகளின் அழகும் ஒளியும் திருமுடியின் அழகையும் ஒளியையும் மிஞ்சுவதாக இருக்கிறதே! உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராக பரந்து அலர்ந்துவிட்டதோ! திருமுடியின் பேரொளியைக் காண தீராமல் திருவடிக்கு வந்தால் திருவடியின் பேரொளி மேலே பிடித்துத் தள்ளுகிறதே! அடடா! உமது திருமேனியின் ஒளியே உமது பட்டுப் பீதாம்பரமாகவும் உமது திருமேனியில் ஒளிவீசும் திருவாபரணங்களாகவும் அனைத்தும் பொன்னிறம் என்னும் படி கலந்து ஒளிவீசுகிறதே! கடலிலே அகப்பட்ட துரும்பை ஒரு அலை இன்னொரு அலையிலே தள்ளி அது இன்னொரு அலையிலே தள்ளி அலைப்பதைப் போலே உமது திருமுடியின் ஒளி திருவடிகளிலே தள்ள அது திருமேனியின் ஒளியிலே தள்ளுகிறதே! காலம் என்னும் தத்துவம் இருக்கும் வரையில் கண்டுகொண்டே இருந்தாலும் திருப்தி வராது என்னும் படியான பேரழகும் பேரொளியும் வாய்த்தது தான் என்னே! நீரே சொல்லியருள வேண்டும்!

English Translation

Did the radiance of your face blossom into a radiant crown over you Did the radiance of your lotus feet blossom into a lotus pedestal below you? Did the radiance of your golden frame transform itself into the robes and ornaments all over you? O Tell me, Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்