- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார். ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதரித்துத் தன்னுடைய ஸௌலப்ய ஸௌசீல்யாதி குணாதிசயங்களைக் காட்டியருளின பெருமான்தானே, பிற்பட்டவர்களும் இழவாமைக்காக இப்போது திருமலையில் நித்யஸந்நிதி பண்ணியிராநின்றானென்பது இரண்டாமடியின் கருத்து. விஷயாந்தர ப்ராவண்யத்திலே நெஞ்சைச் செலுத்தாமல் திருமாலிருஞ்சோலையாத்திரை வழியிலே நெஞ்சைச் செலுத்துங்கோள் என்றாராயிற்று. திருமலைக்கு மறியொடு பிணைசேர் என்ற அடைமொழி கொடுத்து ஸாபிப்ராயம், அங்குக் குட்டியுந் தாயும் பிரியா திருத்தல்போல, நாமும் தாயுந் தந்தையுமாயிவ்வுலகினில் வாயுமீசனைப் பிரியாதிருத்தல் நன்று என்று காட்டியவாறு. ஈற்றடியில் நெறிபட என்பதை ஒரு முழுச் சொல்லாகக் கொண்டு ‘நன்றாக‘ என்றும் கொள்வர், திருமாலிருஞ்சோலையை நன்றாகச் சிந்திப்பது நலம் என்றவாறு.
English Translation
Think! Do not stoop to lowly acts. The Lord who stole butter lives in Malirumsolai in groves amid sporting does and fawns. Contemplating his worship is the only good.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்