விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முடியாதது என் எனக்கேல் இனி?*  முழு ஏழ் உலகும் உண்டான்*  உகந்து வந்து 
    அடியேன் உட்புகுந்தான்*  அகல்வானும் அல்லன் இனி,*
    செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து*  எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,* 
    விடியா வெம் நரகத்து என்றும்*  சேர்தல் மாறினரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முழு ஏழ் உலகும் உண்டான் - ஏழுலகங்களையும் முற்ற அமுது செய்து (பிரளயங்கொள்ளாதபடி காத்தருளின பெருமான்
உகந்து - விரும்பி
அடியேன் உள் வந்து புகுந்தான் - அடியேனுள்ளத்தில் வந்து புகுந்தான்;
இனி அகல்வானும் அல்லன் - இனிமேல் (அப்பெருமான் அகன்று போகவும் மாட்டான்;
கீழ் மேல் எழு பிறப்பும் எமர் - கீழும் மேலும் ஏழ் பிறப்புக்களிலும் எம்மவர்கள்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “முடியாததென் எனக்கே” என்றார்; எல்லாம் பெற்றுவிட்டீரோ? என்று அன்பர் கேட்க, என்னிடத்து எம்பெருமான் பண்ணின விசேஷ கடாக்ஷத்தாலே, என்னோடு ஸம்பந்த ஸம்பந்திகளானவர்களுங்கூட உஜ்ஜ்விக்கப் பெற்றார்களே! இன்னமும் நான் பெறவேண்டியது என்ன இருக்கிறது என்கிறார். பிரளய காலத்தில் இந்த ஜதத்தையெல்லாம் தன் திருவயிற்றிலே வைத்துக் கொண்டவன். ஜகத்துத்குத் தன்னை யொழியச் செல்லாதாப்போலே, என்னை யொழியத் தனக்குச் செல்லாமை தோன்ற, மிக்க அபிநிவேகத்தோடே என்னுள்ளே வந்து புகுந்தான், ஒரு நீராகக் கலந்தான். அந்த ஜகத்து ப்ரளயங் கழிந்தவாறே அகன்ற போயிற்றே, இங்கு அப்படியன்று; இனி அகல்வானுமல்லனிவன். இதனால் எனக்குண்டான பேறு, பனை நிழல்போலே உன்னொருவனளவிலேயே விச்ரமித்துப் போவதன்று; (கீழ்மேல் எழு பிறப்பும் எமர், செடியார்நோய்களெல்லாம் துரந்து விடியாவெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்.) எம்பெருமானுக்கு என்பக்கல் அபிநிவேசம், என்னொருத்தனளவில் பர்யவஸியாதே, என்னோடு ஸம்பந்தித்தவர்கள் மீதும் வென்னங்கோத்தது என்கிறார். விடியா வெந்நரக மென்கிறது ஸம்ஸாரத்தை. அந்த நரகம் ஒருநாள் வரையிலே விடியும் இது விடியாத வெந்நரகம்.

English Translation

What is beyond me now, when the Lord who swallowed the seven worlds has happily entered my lowly heart and does not leave? All my kin through seven generations before and after have been saved from the torment of endless hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்