- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மறப்பும் ஞானமும்* நான் ஒன்று உணர்ந்திலன்,*
மறக்கும் என்று* செந்தாமரைக் கண்ணொடு,*
மறப்பு அற என் உள்ளே* மன்னினான் தன்னை,*
மறப்பனோ? இனி* யான் என் மணியையே.
காணொளி
பதவுரை
நான் உணர்த்திலன் - நான் அறியேன்;
மறக்கும் என்று - (இப்படியிருக்க) இவன் நம்மை மறந்து விடுவன் என்று நினைத்து
செந்தாமரை கண்ணோடு - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களோடு
மறப்பு அற -nமறப்புக்கு அவகாசமில்லாதபடி
என் உள்ளே - எனது நெஞ்சினுள்ளே
விளக்க உரை
மறப்பு என்பதனையும் ஞானம் என்பதனையும் நான் சிறிதும் அறிந்திலேன்; அறிவிற்கு அடைவு இன்றி இருந்த என் பக்கல் அறிவைப் பிறப்பித்தான்; பிறப்பித்தவன், நான் மறக்கக் கூடும் என்று நினைத்து, செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களாலே குளிர நோக்கிக்கொண்டு ஒருநாளும் மறக்க ஒண்ணாதபடி என்னுள்ளே வந்து நிலைபெற்று நின்றான்; அவ்வாறு நின்றவனை, எனக்கு மணியைப் போன்றவனை யான் இனி எங்ஙனம் மறப்பேன்?
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்