விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மா யோனிகளாய் நடை கற்ற*  வானோர் பலரும் முனிவரும்* 
    நீ யோனிகளைப் படை என்று*  நிறை நான்முகனைப் படைத்தவன்*
    சேயோன் எல்லா அறிவுக்கும்;*  திசைகள் எல்லாம் திருவடியால் 
    தாயோன்*  எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்*  தான் ஓர் உருவனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நடை - ஸ்ருஷ்டி முதலான வியாபாரங்களை
கற்ற - அறிந்திருக்கிற
வானோர் - தேவர்களும்
முனிவரும் - ரிஷிகளும்
பலரும் - மற்றும் பலருமாகிய

விளக்க உரை

 ‘உயர்ந்த பிறவிகளையுடையவர்களாய்த் தத்தம் தொழில்களை நன்கு அறிந்த தேவர் பலரும், முனிவர்களும் ஆகிய பொருள்களை நீ படைப்பாய் என்று ஞானம் நிறைந்த பிரமனைப் படைத்தவன்; அப்பிரமன் முதலான தேவர்களுடைய அறிவிற்கும் அப்பாற்பட்டவன்; திசைகளையுடைய பூமி முழுவதையும் தன் திருவடிகளால் அளந்தவன்; எல்லா உயிர்கட்கும் தாயைப் போன்றவன்; இப்படிப்பட்ட இவனும் ஒரு தன்மையினையுடையவனாய் இருக்கிறானே! மேன்மைக்கு எல்லை இல்லாததனைப்போன்று, நீர்மைக்கும் எல்லையின்றி இருக்குந்தன்மை என்னே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

English Translation

You created the sages and the celestials, even the four-faced Brahma, and gave him the power the make the wombs of all creation. Lord who stepped over all creation and measured the Universe, you are compassionate to all, like a mother to all beings!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்