விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்*  பெருமான் கண்ணனை* 
    வள வயல் சூழ் வண் குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்து உரைத்த*
    அளவு இயன்ற அந்தாதி*  ஆயிரத்துள் இப் பத்தின்* 
    வள உரையால் பெறலாகும்*  வான் ஓங்கு பெரு வளமே. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அளவு இயன்ற - எல்லையைக் கடந்த
ஏழ் உலகத்தவர் பெருமான் - ஏழுலகங்களிலுமுள்ள சேதநர்களுக்கும் தலைவனான
கண்ணனை - எம்பெருமானைக்குறித்து,
வளம் வயல் சூழ் - வளர்ப்பமுள்ள கழனிகள் சூழ்ந்த
வண் குருகூர் - அழகிய திருநகரிக்குத் தலைவராகிய

விளக்க உரை

அளவினைக் கடந்த ஏழுவகையான உலகத்தில் உள்ளவர்கட்குப் பெருமானாகிய கண்ணபிரானை, வளப்பம் பொருந்திய வயல்களாற் சூழப்பட்ட அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் மனம் பொருந்தி அருளிச்செய்த, பெருமையின் எல்லையைக் கடந்த அந்தாதியான ஆயிரந்திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களின் வளப்பம் பொருந்திய சொற்களால் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டில் சென்று செய்யப்படும் மிக உயர்ந்த தொண்டினைப் பெறலாகும்.

English Translation

This decad of the matchless thousand songs by Satakapan of kurugur surrounded by fertile fields addresses the measureless Krishna, maker of the sever worlds. Those who master it shall enjoy the wealth of heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்