விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்மலைபோல் நின்றவன்தன் பொன்னகலம் தோயாவேல்*
    என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி
    முன்னிருந்து மூக்கின்று, மூவாமைக் காப்பதோர்
    மன்னும் மருந்தறிவீர் இல்லையே?*  -மால்விடையின்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலர் மங்கை மன்னும் மைந்தன் - பூவிற் பிறந்த பெரிய பிராட்டியோடு சேர்ந்த பிரமபுருஷனாயும்
கணபுரத்து பொன்மலை போல் நின்றவன் தன் - திருகண்ணபுரத்தில் பொன் மலைபோல் நிற்பவனாயுமுள்ள எம்பெருமானுடைய
பொன் அகலம் தோயா எல் - அழகிய திருமார்பிலே சேர்வதற்கு உறுப்பாகாவிடில்
வாளா இவை என் - வயாத்தமான இந்த வஸ்துக்கள் எதுக்கு?

விளக்க உரை

பேதையன் – இப்படி ஹிம்ஸை பொறுக்கமுடியாமல் வருத்தமுறுகிற இந்நிலைமையில் முடிந்து பிழைக்கலாமாயினும் “என்றேனு மொருநாள் நமது மநோரதம் ஸித்திக்குமோ“ என்னும் நசையாலே பிராணனைப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கிற சாபல்யம் தோற்றுகிறது. வல்லி – வடசொல். வாசம் – வாஸலை வறுநிலம் – புல்பூண்டு தண்ணீர் ஒன்று மில்லாத மரு காந்தாரம். “எனக்கே பொறையாகி“ என்றவிடத்து. “இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி நோக்கத்தக்கது. முன்னிருந்து - பெண்மைக்கு உறுப்பாக முலையிருக்க வேண்டியது அவசியமாகில் முதுகிலே முளைத்தாலாகாதோ? கண்ணெதிரே முளைத்து வீங்கவும் வேணுமோ?

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்