விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,*  தனது-
    நல்நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்,*

    முன்னுரையில் கேட்டறிவது இல்லையே?,*  -சூழ்கடலுள்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தமீஇக் கொண்டு - ஆலிங்கனஞ் செய்துகொண்டு
தனது நல் நகரம் போய் புக்கு - தன்னுடைய தழகான ஸ்தாநத்திலே (நாகலோகத்திலே) போய்ச் சேர்ந்து
இனிது வாழ்ந்ததுவும் - ஆனந்தமாக வாழ்ந்தாளென்பதையும்
முன் உரையில கேட்டு அறிவது இல்லையே - மஹாபாரத்தில் நீங்கள் கேட்டறிந்த்தில்லையா?

விளக்க உரை

பந்நகம் என்ற வடசொல் பாம்பு என்று பொருள்படும் பத்-காவாலே ந க –நடவாத்து உரகமாதலால் மார்பாலே ஊர்ந்து செல்வது என்று பொருள் – அச்சொல் இங்குப் பன்னாகமென நீண்டு கிடக்கிறது. ‘பன்னகராயன்‘ என்றே பாடமிருந்தாலும் தளை பிறழாது ஆயினும் பன்னாக ராயனென்றே பாடமாம். பாவை –சித்திரப்பதுமை உவமையாகுபெயரால் ஸ்த்ரீயைக் குறிக்கும். இங்கு பிரநரணம் நோக்கிப் புத்திரியைக் குறித்த்து. பாவைதன் மன்னிய என்றவிடத்துள்ள பாவை என்னுஞ் சொல் ஸ்த்ரீத்வத்தைக் குறிக்கும். நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்று ஸ்த்ரீகளுக்கு உரியகுணங்கள் நான்கு, இவற்றுள் நாணமாவது – தகாத காரியத்தில் மனமொடுங்கி நிற்பது, கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையுமாம். மடமாவது எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல் அச்சமாவது - மிகச்சிறிய காரணத்தினாலும் மனம் நடுங்குதல். பயிர்ப்பாவது – பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக்கொள்வது.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்