விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் மழைதவழும் வாள் நிலா நீள் மதி தோய்
    மின்னின் ஒளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,*

    மன்னும் மணிவிளக்கை மாட்டி,*  -மழைக்கண்ணார்- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் - புஷ்பங்களை யணிந்தும் மயில் தோகை போன்றுமிருக்கிற கூந்தலை யுடையவர்களாயும்
மழை தட கண் - குளிர்ந்து விசாலமான கண்களை யுடையவர்களாயும்
மின் இடையாரோடும் - மின்போல் நுண்ணிய இடையை யுடையவ்ர்களாயு மிருக்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீகளோடே

விளக்க உரை

காற்றுக்கு உருவமில்லையாயினும் ஆழ்வார் தமது சமத்காரந் தோற்ற அதனை ஒரு மஹா புருஷன் போலத் தோற்றுவித்து வருணிக்கிறபடி பாருங்கள், - மஹா புருஷன் வரும்போது நல்ல பூக்களைத் தலையிற் சூடிக்கொண்டும் நல்ல மாலையைத் தோளிலணிந்து கொண்டு பின்னே சிவ சேவகர்கள் தொடரவும் வருவனே, அப்படியே வருகிறதாம் அந்தத் தென்றலும், அதாவது – நீலோற்பல மலர்களின் தாதுக்களைச் சூடிக்கொண்டும் பாரிஜாத மலர் மாலையைத் தோளிலணிந்து கொண்டும் அம்மலரிலுள்ள மதுவில் நசையாலே பின் தொடர்ந்து வருகின்ற வண்டுகளாலே பின் செல்லப்பெற்றும் வருகின்ற தென்கிறார். தென்றலானது நல்ல பொய்கைகளில் வியாபித்து அங்குள்ள மலர்களின் மணத்தை என்று வீசிக்கொண்டே வருகின்ற தென்றவாறு.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்