விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துஞ்சா முனிவரும்*  அல்லாதவரும் தொடர நின்ற,*
    எஞ்சாப் பிறவி இடர் கடிவான்,*  இமையோர் தமக்கும்- 
    தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே*
    நெஞ்சால் நினைப்பு அரிதால்,*  வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துஞ்சா முனிவரும் - கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்
அல்லாதவரும் - தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று - பின்பற்றி வழிபடநிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான் - (அடியார்களுடைய) குறைவற்ற பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத - தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத

விளக்க உரை

ஸர்வேச்வரனுடைய பரத்வத்திலும் ஸௌலப்யத்திலுமண்டான போக்யதை எவர்க்கும் அளவிட்டு நினைப்பதற்கு முடியாதென் றருளிச் செய்கிறார். ‘வெண்ணெயூணென்னு மீளச் சொல்லே’ என்றதனால் ஸௌலப்யகுணமும், மற்றவற்றால் பரந்த குணமும் குறிக்கப்பட்டனவென்க. ‘பரத்வத்தை ஒருவாறு எல்லைகண்டாலும் காணலாகும். ஸௌலப்யம் யார்க்கும் எல்லைகாண்பதரிது’ என்பது தோன்ற ‘நெஞ்சால் நினைப்பதரிதால் வெண்ணெயூணென்ன மீளச்சொல்லே’ எனறு நவீத சௌர்யவ்ருத்தாந்தம் ப்ரதாத விசேஷ்ய மாகத் தலைக்கட்டப்பட்டுள்ளதென்க. ‘வெண்ணெயூணென்னு மீளச்சொல்- நெஞ்சால் நினைப்பரிதால்’ என்றவிடத்திற்கு நம்பிள்ளையீடு காண்மின்:- “ஸர்வேச்வரனாய் ப்ரஹ்மாதிகளக்குங் கூட ஆச்ரயணீயனாய் அவரப்த ஸமஸ்தகாமனாயிருக்கிறவன், ஆச்ரிதஸ்பர்சமுள்ள த்ரவ்யமே எனக்கு தாரகமாய் அதுதான் நேர்கொடுநேர் கிட்டப்பெறாதே இப்படி களவு கண்டாகிலும் பூஜிக்க வேண்டி அதுதான் தலைக்கட்டப் பெறாதே வாயாது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு ப்ரதிக்ரியை யற்று உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்றநிலை சிலர்க்கு நிலமோ?” என்று.

English Translation

The sleepless Minis who overcome the pangs of repeated births, and all others, worship the lord without a peer or superior, who is the lord of celestials too. But the wonder of his coming to steal butter is beyond their comprehension indeed!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்