விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேதனை வெண் புரி நூலனை,*  விண்ணோர் பரவ நின்ற-
    நாதனை*  ஞாலம் விழுங்கும் அநாதனை,*  ஞாலம் தத்தும்-
    பாதனை பாற்கடல் பாம்பு அணைமேல் பள்ளிகொண்டருளும்*
    சீதனையே தொழுவார்,*  விண்ணுளாரிலும் சீரியரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேதனை - வேதம் வல்லவனும்
வெள் புரி நூதனை - சுத்தமான யஜ்னோபவித முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை - மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை - (பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி (அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை - உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்

விளக்க உரை

நாயகனைப் பிரியாத பாக்கியம் பெற்ற மகளிர்களின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கும் பாசுரம் இது. வேதம் வல்லவனாய் சுத்தமான யஜ்ஞோபவீத மணிந்தவானய் மேலுலகத்தார் துதிக்குமாறு அவர்கட்குத் தலைவனாக நிற்பவனாய்ப் பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுள் வைத்து நோக்குபவனாய்த் தனக்கொரு தலைவனையுடையனாகாதவனாய் உலகத்தையளந்த திருவடியையுடைவனாய்த் திருப்பாற்கடலில் க்ஷேசாயியாகி யோகந்துயிர் கொண்டருள்பவனாய்க் குளிர்ந்த தன்மையயுடைவனான எம்பெருமானையே இடைவிடாது வணங்கி யநுபவிப்பவர் யாரோ, அவர்கள் பரமபதத்தில் வாழும் நித்ய முக்தர்களிற் காட்டிலும் சிறப்புடையராவர் என்கிறது. நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை சிறப்புடையராவர் என்கிறது. நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை யாற்றுவிக்கிற தோழியை நோக்கி, ‘நாயகனைப் பிரியாமல் அவனுடன் என்றுங்கூடி வாழ்பவர் முத்தியுலகத்துப் பேரின்பம் நுகர்வாரினுஞ் சிறப்புடையாராவர், என்ற இதனால் ‘அப்படிப்பட்ட பாக்ய விசேஷத்தை யான் பெற்றிலனே!’ என்று தன் ஆற்றாமை மிகுதியை வெளியிட்டாளாயிற்று. ஸ்ரீதேவியும் பூதேவியும் ஒருகாலும் விட்டுப் பிரியாது திருவடி வருடக் கூடிக்குலவி யின்புற அவர்களுடன் அறிதுலமருந்தன்மையை ‘பாற்கடல் பாம்பணைமேற் பள்ளிகொண்டருளுஞ் சீதனை’ என்றதனால்குறிப்பிட்டு,அப்படிப்பட்ட இடையீடில்லாப் போகம் தனக்குக் கிடையாமையைப் பற்றிப் பொறாமையும் வருத்தமுங் கொண்டவை கொள்க.

English Translation

The Lord of the Vedas, the Lord wearing a white thread, the lord worshipped by celestials, the Lord of all, the lordless one who swallows the Universe, the lord who straddled the earth, the lord reclining on a cool serpent bed in the deep Ocean of Milk, -those who worship hum thus are superior even to the gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்