விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இசைமின்கள் தூது என்று*  இசைத்தால் இசையிலம்,*  என் தலைமேல்-
    அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்,*  அம் பொன் மா மணிகள்-
    திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள்*  சிமயம் 
    மிசை*  மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்பொன் - அழகிய பொன்னும்
மா மணிகள் - சிறந்த ரத்னங்களும்
திசை - திக்குகள் தோறும்
மின் மிளிரும் - மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து - திருவேங்கட மலையினது

விளக்க உரை

தூதுபோகச் சொன்னவிடத்தும் போகாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்கிப் பேசும் பரசுரம் இது. திருவேங்கடமலையின்மேற் சென்று சேரும்பொருட்டுப் பிரயாணப்பட்ட மேகங்களை நோக்கித் தலைமகள் ‘என்னைப் பிரிந்து அங்குச் சென்று வஸிக்கின்ற எனது தலைமகனுக்கு என் நிலைமையைச் சொல்லுமாறு நீங்கள் எனக்குத் தூதராக வேணும்’ என்று வேண்ட, அதற்கு அவை உடன்படக் காணாமையால் மீண்டும் அவற்றை நோக்கி’ அவனுள்ளவிடத்தேறச் செல்லும் பாக்கியமுடைய நீங்கள் அங்ஙனஞ் செல்லமாட்டாத எனது தலையின் மேல் உங்கள் பாதத்தை வைத்தாவது செல்லுங்கள்’ என்று பிரார்த்திக்க திருமலைத்தலைமேற்சென்று தங்குவதற்கு தவ்ரைப்படுகின்ற அவை இவள் தலைமேல் தங்கி நிற்பதற்கும் இசைதல் அரிதாயிருந்த தன்மையைக் குறித்துத் தலைவி இரங்குகின்றாளென்னவுமாம்.

English Translation

The dark lightning cloud prepares to leave for Venkatam to rain gold and gems everywhere over the strong peaks. When I entreat them to take a message for me, they refuse, will they of least move over my head? Ah, yes!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்