விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தரித்திருந்தேன் ஆகவே*  தாரா கணப்போர் 
    விரித்துஉரைத்த*  வெம்நாகத்துஉன்னைத்*  தெரித்துஎழுதி 
    வாசித்தும் கேட்டும்*  வணங்கி வழிபட்டும்* 
    பூசித்தும் போக்கினேன் போது. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாசித்தும் - (எழுதினவற்றைப் படித்தும்)
கேட்டும் - (ஆங் காங்கு) ச்ரவணம் பண்ணியும்
வணங்கி - நமஸ்காரம்பண்ணியும்
வழிபட்டும் - உபசாரங்களைச் செய்தும்
பூசித்தும் - பூஜித்தும்

விளக்க உரை

சொல்லிற்றாகிறதென்னென்னில், பகவத் கிருபையாலும் ஸதாசார்ய கடாக்ஷத்தாலும் ஆழ்வார்களருளிச் செயல்களின் உண்மைப் பொருள்களை நன்குணர்ந்து அருளிச் செய்தவரும், இற்றைக்குச் சற்றேறக் குறையத் தொள்ளாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஸர்வஜ்ஞராயப் புகழ்பெற்று விளங்கின வருமான பெரியவாச்சான் பிள்ளை பிழையான பாடமொன்றைக் கொண்டனரென்றும், அப்பாடப்படி உரைக்கும் பொருள் பொருத்தமற்றதென்றும் சொல்லிற்றாகிறது. “வெம் நாகத்து“ என்பது பெரிய வாச்சான் பிள்ளை உரைசெய்தருளின பாடம். “என் ஆகத்து“ என்பது இப்புதிய புலவர் கற்பிக்கும் பாடம். பழைய பாடத்திற் பொருத்தமின்மை கூறப்புகுமவர் தாங்கூறும் பாடத்தில் ஒரு பொருத்தம்காட்டித் தீரவேண்டும். ஆதிசேஷன் செய்த சோதிட நூல் இன்னதென்று தெரியவில்லை யென்னுமிவர் திருமழிசைப்பிரான் செய்த சோதிட நூல் இன்னதென்று தெரிந்து கொண்டவராதல்வேண்டும். “பார்க்கவம் பிருகு சூத்திர முதலிய கணித சோதிட கிரந்தங்கள் உள்ளன, இவை போன்றதொன்றே பிருகு வமிசத்தவரான ஆழ்வார் அருளிச்செய்ததாக வேண்டும்.“ என்று அநுமானங் கூறுகின்றார். இத்தகைய அநுமானம் ஆதி சேஷன்பக்கல் கூடாமைக்குக் காரணமறிகின்றிலோம். வேதாங்கங்களுள் ஒன்றான ஜ்யோதிக்ஷத்திற்கு ஆதிசேஷன் ப்ரவர்த்தகன் என்னுமிடத்தை “***“ இத்யாதிகளான பல பிரமாணங்களினால், நன்கறிந்தே பூருவர்கள் மிகப்பொருத்தமாக வியாக்கியானஞ் செய்தருளினர். இவ்விஷயமாகச் சில வாண்டுகட்கு முன்னர் நாம் பலவிடங்களிலும் பல பெரியோர்களை விசாரித்து வருகையில், மலைநாட்டில் திருவனந்தசயனத்தில் மலையாளிச் சோதிட நிபுணரொருவர் எடுத்துரைத்த ச்லோகம் மேற்குறித்தது. புராதநமான சோதிடநூலொன்றின் வியாக்கியானத்தில் மங்களச்லோகமாக அமைந்ததாமிது. இன்னமும் ஊன்றி ஆராயப்புகில் இத்தகைய ஆதாரங்கள் ஆகரத்துடன் பல கிடைக்கக் குறையில்லை. இது நிற்க. திருமழிசைப்பிரான் பல மதங்களிலும் புகுந்து அந்தந்த மதங்கட்குச் சார்பாகப் பல நூல்களும் இயற்றினரென்னும் ப்ரஸித்தியிருந்தாலும் சோதிட நூல் இயற்றியருளினராக எங்குங்கூறப்படவில்லை. அங்ஙனே ஏதேனுமொருநூல் தாம் செய்தருளியிருந்தாலும் அதனை இங்கு அநுவதித்தருளிச் செய்தற்கு ப்ரஸக்தியொன்றுமில்லை. இவ்வண்ண மருளிச்செய்யும் வழக்கம் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களி லொன்றிலுமில்லை. ஆகவே ‘என் ஆகத்து‘ என்று பாடத்தை மாறுபடுத்தல் பயனற்றது. ஸர்வஜ்ஞர்களான பூர்வாசார்யர்களின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகளில் அல்பஜ்ஞரான நாம் குறைகூறுதற்குச் சிறிது மதிகாரமுடையோமல்லோம். பூருவர்கள் ப்ரமித்தார்களெனினும் அந்த ப்ரமமே நமக்கும் தஞ்சமகாத்தக்கது. ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீமணவாளமாமுனிகள் வரையிலுள்ள ஸதாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகள் வேதவாக்கினுஞ் சிறந்து பிரமாணமாவனவென்று திண்ணிதாகக் கொள்வாரது திருவடிகளே சரணம். பூருவர்களருளிச்செய்த பொருள் கட்கு முரண்படாமல் விசேஷார்த்தங்களை விவேகித்துக்கூறின் குறையொன்றுமில்லை. இதுவே கலையறக்கற்ற மாந்தர்பணியாம். இன்னமுமிங்கு விரித்துரைக்கவேண்டும் விஷயங்களைத் தனிப்புத்தகத்தில் விரித்துரைத்தோம், கண்டு கொள்க. தாராகணப்போர் –‘தாராகணம்‘ என்னும் வடசொல் தொடர் நக்ஷத்ரஸமுஹமெனப் பொருள்படும். அவற்றின் ஸஞ்சாரத்தை ஜ்யோதிச் சாஸ்த்ரமுகத்தால் விரித்துரைத்தவரான திருவனந்தாழ்வானுக்கு அந்தாரத்மாவாயிருக்கிற வுன்னை. வேதம், பஞ்சராத்ரம், இதிஹாஸ புராணம் முதலிய வேதோபப்ரும்ஹணங்கள் முதலானவற்றை, தன் முகமாகவும் பிரமன் முகமாகவும் சில முனிவர்க்குத் தான் அந்தராத்மாவாயிருந்து அவர்கள் முகமாகவும் வெளியிட்டதுபோல் ஆதிசேஷனுக்கு அந்தராத்மாவாயிருந்து ஜ்யோதிஸ் சாஸ்த்ரத்தை வெளியிட்டருளினன் என்னும் உண்மையை வெளியிடுதலே இவ்விசேஷணத்திற்குப் பிரயோஜன மென்க.

English Translation

I have waited patiently for you all these years. That is why I learnt from your serpent Adisesha, -who unravelled the mysteries of astrology, -all about you, through writtings, by word of mouth, through obeisance, through service, and through prayer. My wife has been well spent.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்