விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அருளாது ஒழியுமே*  ஆல்இலைமேல்,*  அன்று
    தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்,*  இருளாத
    சிந்தையராய் சேவடிக்கே*  செம்மலர்தூய் கைதொழுது,* 
    முந்தையராய் நிற்பார்க்கு முன்? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இருளாத சிந்தையர் ஆய் - அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சையுடையாய்க் கொண்டு
சே அடிக்கே - திருவடிகளுக்கு
செம் மலர் தூய் - நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து
கை தொழுது - அஞ்ஜலிபண்ணி
முந்தையர் ஆய் நிற்பார்க்கு - ‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு,

விளக்க உரை

ஞ்சாதிருக்கவருள் என்று சொல்லிவிட்டால் தவறாமல் அருள்வனோவென்ன, ‘நம் அருளை எதிர்பார்ப்பார் ஆரேனுமுண்டோ? என்று நோக்கியிருக்கு மெம்பெருமான் அருள்செய்யா தொழியமாட்டான், அருள்செய்தே தீருவன், ஆனால் எல்லார்க்கும் அருள்செய்தால் ஸர்வமுக்தி ப்ரஸங்க முண்டாகி லீலாவிபூதியே அழிந்துபோக நேருமாகலால், இருளாத சிந்தையாய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது முந்தையராய் நிற்பார் எவரோ, அவர்க்கே அருள்செய்யக் கடமைப்பட்டிருக்கிற னெம்பெருமான் என்கிறார். உலகமெல்லாம் பிரளயத்தில் அழிவதாயிருக்கையில் அவற்றையெல்லாம் வாரியெடுத்து வயிற்றினுள்ளடக்கிச் சிறியதோ சாலந்தளிரிலே துயின்றவனாதலால் எம்பெருமானுக்கு அடியார்களைக் காத்தருள்வதில் ஸாமர்த்தியமும் உத்ஸாஹமும் குறையற்றதென்று காட்டுதற்காக ஆலிலைமேலன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் என்றார். இருளாத சிந்தையாய் – ரஜஸ்தமோ குணங்கள் கலசாமல் சுத்தஸாத்விகராய் என்கை. முந்தையர் – பகவத் கைங்கரியத்திற்கு முற்பட்டிருக்குமவர்கள்.

English Translation

The Lord who swallowed the seven worlds and slept as a child will never deny his grace, But those who come to him first, with a tranqull mind, strewing fresh flowers at his feet with folded hands, will receive his grace first.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்