விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நன்குஓதும்*  நால் வேதத்துஉள்ளான்*  நறவுஇரியும்
    பொங்குஓ தருவிப் புனல்வண்ணன்,* - சங்குஓதப்
    பாற்கடலான்*  பாம்புஅணையின் மேலான்,*  பயின்றுஉரைப்பார்
    நூல்கடலான் நுண்அறிவினான்  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நறவு இரியும் - தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய்
பொங்கு ஓதம் அருவி புனல் - கடல் போலவும் அருவிநீர் போலவுமுள்ளதான
வண்ணன் - திருமேனியை யுடையவனும்
சங்கு ஓதம் பால் கடலான் - சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண்வளர்த்தருள்பவனும்
பாம்பு அணையின் மேலான் - சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும்

விளக்க உரை

எம்பெருமானுடைய திருநாம ஸங்கீர்த்தநம் பண்ணினால் எல்லாவகை நன்மைகளும் வந்துகூடு மென்றார் கீழ்ப்பாட்டில், எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உள்ளபடியே உணருகையாகிற நன்மையும் உண்டாகுமோ என்று கேள்விபிறக்க, எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உணர்வது மாத்திரம் அருமையான தென்கிறார் இதில். நால் வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டவனாய், ‘தேன் தோற்றது‘ என்னும்படியான போக்யதையுடைய விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹமுடையனாய், திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளர்ந்தருளுமவனாய், மநு முதலிய மஹர்ஷிகளினால் வேதங்களுக்கு உபப்ரும்ஹண (வியாக்கியான) மாக இயற்றப்பட்ட ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களினால் பிரதி பாதிக்கப்பட்டவனான எம்பெருமான், நுண்ணறிவினான் – நுட்பமான அறிவையுடையவன், அதாவது – அவனை அறிவது மிகவும் நுட்பமானது – அஸாத்யமானது என்றபடி. “நுண்ணறிவினான்“ என்பதற்கு – ஸூக்ஷ்மமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடியவன், (நம் போன்றவர்களுடைய ஸ்தூலமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடாதவன்) என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டாமடியில், ஓதம் + அருவி, ‘ஓதமருவி‘ என்றாக வேண்டுவது ‘ஓதருவி‘ என்றானது தொகுத்தல்.

English Translation

The Lord is the substance of the Vedas. He is a mountain stream sweeter than honey, He is the hue of the dark ocean. He reclines on a serpent in the Ocean of Milk. He is the ocean of knowledge for men of learning. He is subtle knowledge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்