- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
நீ அன்று உலகு அளந்தாய்* நீண்ட திருமாலே,*
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால்,* - நீ அன்று-
கார் ஓதம் முன் கடைந்து* பின் அடைத்தாய் மா கடலை,*
பேர் ஓத மேனிப் பிரான்.
காணொளி
பதவுரை
பேர் ஓதம் மேனி பிரான் - பெரிய கடல் போன்ற திருமேனியையுடைய பெருமானே!
நீண்ட திருமாலே - எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ - இப்படிப்பட்ட நீ
அன்று - முன்பொருகால்
உலகு - உலகங்களை
விளக்க உரை
எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை நினைந்து வாயாரப் பேசி யேத்துகிறார். திரிவிக்கிரமனாகி உலகளந்தாய்; மஹாவராஹமாகி உலகிடந்தாய்; வங்கக்கடல் கடைந்தாய்; அக்கடலிலே அணைகட்டினாய் என்று மஹர்ஷிகள் கூறுகின்றார்களென்கிறார்.
English Translation
You stretched and took the Earth. O Lord Tirumal They say you lifted the Earth too, churned the ocean and then made a bridge over it! Ocean-hued Lord!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்