- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் “கோல்தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்” என்னும்படியாக ஆசை கரைபுரண்டு செல்லப்பெற்ற மதமுடைய திருவுள்ளத்திலே திருவேங்கடமுடையான் அழகிய மணவாளன் திருப்பாற்கடல் நாதன் பரமபதநாதன் ஆகிய எம்பெருமான்க ளெல்லாரும் வந்து குடிகொண்டபடியைக் கூறுகின்றாரிதில். தேவாதிதேவனான பரமபத நிலயன் ஜகத்ரக்ஷணார்த்தமாக முதலில் திருப்பாற்கடலில் வந்து தங்கிப் பின்பு ஸ்ரீக்ருஷ்ணனாயவதரித்து ‘இப்படி நாம் வருவதும்போவதுமாக இராமல் ஸ்திர ப்ரதிஷ்டையாக இருந்து ஸம்ஸாரிகளைக் காக்க வேணும்’ என்று திருவுள்ளம் பற்றிக் கோயில் திருமலை முதலிய திருப்பதிகளிலே யெழுந்தருளியிருந்து இப்போது என்னெஞ்சிலே வந்து கிடக்கிறானென்கிறார். இப்பாட்டில் ‘மனத்துள்ளான்’ என்பது முதலிலேயிருந்தாலும் அர்த்தஸ்வாரஸ்யம் நோக்கி அது முடிவுசொல்லாகக் கொள்ளப்படும். தேவாதி தேவன் - வடசொல் தொடர்.
English Translation
The sky and Earth praise him as the lord of gods. The ocean reclining lord resides in venkatam, in the beautiful-beyond-imagination-Arangam and in the hearts of all. He ripped the horse's jaws, as the Gokulam child.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்