விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படிகண்டு அறிதியே*  பாம்புஅணையினான்,*  புள்- 
    கொடி கண்டுஅறிதியே? கூறாய்,* - வடிவில்-
    பொறிஐந்தும் உள்அடக்கி*  போதொடு நீர்ஏந்தி,* 
    நெறிநின்ற நெஞ்சமே! நீ  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாம்பு அணையினான் - சேஷ்ஷாயியான பெருமானுடைய
புள் கோடி - கருடப்பறவையாகிற த்வஜத்தை
கண்டு - ஸேவித்து
அறிதியே - அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி - அவனது திருமேனியை

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “பிரானுன் பெருமை பிறராரறிவார்” என்று ஆழ்வார்ருளி செய்யவே, அவரது நெஞ்சானது “பிறராரறிவாரென்று சொல்லுவானேன்? நானறிந்திருக்கிறேனே:” யென்று அபிப்ராயங்காட்ட; நெஞ்சே! நீயும் இந்திரியங்களை வென்று ஆச்ரயனத்திலே இழிந்தாயத்தனையல்லது இன்னமும் அவன் படிகளை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றாயில்லையே; அப்படி ஸாக்ஷாத்கரித்திருப்பாயேல், அப்பெருமான் பெரிய திருவடியாகிற த்வஜத்தை யெடுத்துப் பிடித்துக்கொண்டு ஆச்ரிதரக்ஷணார்த்தமாக எழுந்தருளும்படியை ஸேவிக்கப் பெற்றாயோ? அன்றி, அவன் திருவனந்தாழ்வா நநுபவிக்குபடி தனது திருமேனியைத் தந்தவண்ணமாக யோகநித்திரை செய்தருளும்படியை ஸேவிக்கப்பெற்றாயோ? ஏதேனும் ஸேவிக்கப்பெற்ற துண்டாகில் சொல்லிக்காண் என்கிறார்.

English Translation

Glorious is the serpent-reclining form of the Lord, -can you see him. O Heart? Tell me, can you at least see his Garuda banner? Subduing the senses, steadying the mind, you have worshipped him with pure water and flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்