விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேசினார் பிறவி நீத்தார்*  பேர்உளான் பெருமை பேசி,* 
    ஏசினார் உய்ந்து போனார்*  என்பது இவ்உலகின் வண்ணம்,*
    பேசினேன் ஏச மாட்டேன்*  பேதையேன் பிறவி நீத்தற்கு,* 
    ஆசையோ பெரிது கொள்க*  அலைகடல் வண்ணர் பாலே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேர் உளான் - திருப்பேர் நகரில் எழுந்தருளி
பெருமை - பெருமையை
பேசினார் - பேசினவர்கள்
உய்ந்து போனார் - உஜ்ஜீவித்தார்கள்.
என்பது - என்று சொல்வது

விளக்க உரை

“காற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான், பற்றியுரலிடையாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக்கொலோ“ என்று ஆண்டாள் வயிறெரிந்து பேசும்படியாக தூஷித்தவர்களில் தலைவனான சிசுபாலன் முதலானவர்கள் ‘ஏசினார்‘ என்பதாற் கொள்ளப்படுவர்; வைகிறவனுக்கும் பேர்சொல்லி வையவேண்டி யிருப்பதால் ஏதேனுமொரு படியாலே நம்முடைய திருநாமத்தைச் சொன்னானென்றுகொண்டு எம்பெருமான் ஏசுகிறவர்களுக்கும் நற்கதி நல்குவதுண்டு. சிசுபாலனுக்கு மோக்ஷங்கிடைத்தென்பதைப் பராசர மஹர்ஷி பகர்ந்துவைத்தார், என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன், திருவடி தாட்பாலடைந்த“ என்றார் நம்மாழ்வாரும். என்றார் ஆளவந்தாரும். என்பது இவ்வுலகின் வண்ணம் = லோகமென்கிற சொல்லால் சாஸ்த்ரத்தைவ் சொல்லுகிற வழக்கமுண்டு. “எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே“ என்ற திருவாய்மொழி வியாக்கியானங்களிலும், என்ற ஆளவந்தார், ஸ்தோத்ர வியாக்யானங்களிலுங் காணலாம். ஆகவே இங்கு உலகின் வண்ண மென்று சாஸ்த்ரமர்யாதையைச் சொன்னபடி. (சாஸ்த்ரமறிந்த) உலகத்தவர்கள் சொல்லுவார்கள் என்று பொருள் கொண்டாலுங் கொள்ளலாம். பேசினேன் – எம்பெருமானுடைய பெருமையை நான் பேசினேனென்பதாகப் பொருள்படுவதன்று; ‘ஆ! நாம் வெகு நன்றாகப் படித்துவிட்டோம் என்றால், படிக்கவில்லை யென்று பொருளாவது போல இங்கும் எதிர்மறையாகக் கொள்ளத்தக்கது. எம்பெருமான் பெருமையைப் பேசவல்ல அதிகாரி நானோ என்று இழித்துச் சொல்லுகையில் திருவுள்ளம். இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்கதிகாண்மின்;- ‘உண்ணப்புக்கு மயிர்ப்பட்டு அழகிதாக உண்டெனென்னுமாபோலே“ என்பதாம். ஏசமாட்டேன் – ஏசி்ப் பெறக்கூடிய மோக்ஷம் வேண்டா என்றபடி.

English Translation

Those who offered praise to the Lord of Tirupper found their salvation. Those who offer abuse also found their salvation, as is seen in history. A fool though I am, I shall not offer abuse, but only praise the Lord of ocean hue. Alas, my love for him is enormous, know it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்