விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொண்டீர் பாடுமினோ,* 
    சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,* 
    ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
    தொண்டீர்! பாடுமினோ  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் தர்வேல் - அழகிய மாலையையும் வேற்     படையையுமுடையவருமான்
கலியன் - ஆழ்வார்
ஒலி - அருளிச்செய்த
மாலைகள் - இச்சொல்மாலையை
பாடுமின் - பாடுங்கள்

விளக்க உரை

உண்டியே உடையே உகந்தோடுகிற ஸம்ஸாரிகள் தங்கள் ஜீவனத்துக்கு வேண்டிய பாட்டுகளைப் பாடிப் போதுபோக்கித் திரிகிறார்கள்; அவாகள் அப்படியே தொலையட்டும்; அப்படியல்லாமல், பகவத் குணங்களிலே யீடுபட்டுத் தொண்டர் என்று புகழ் பெற்றிருக்குமவாகளே! நீங்கள் உங்கள் ஸ்வரூபத்துக்குத் தகுதியாக இத்திருமொழியைப் பாடித் திரியுங்கோள் என்கிறாராயிற்று. இத்திருமொழிகற்கைக்கு வேறொரு பலன் அருளிச் செய்யாதொழிந்தது, இதனைப் பாடுகைதானே ஸ்வயம் ப்ரயோஜநமென்று காட்டுதற்காக.

English Translation

Devotees! Sing these songs.-Bee-humming fragrant groves of Mangai;s king kalikanri, spear wielder;s –Devotees! Sing these songs.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்