விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கரையாய் காக்கைப்பிள்ளாய்,*  
    கருமாமுகில் போல்நிறத்தன்,*
    உரைஆர் தொல்புகழ்*  உத்தமனை வர*  
    கரையாய் காக்கைப்பிள்ளாய்!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காக்கைப் பிள்ளாய் - காக்கைக்குட்டியே!
கரு மா முகில் போல் நிறத்தன் - காளமேகநிறத்தனாய்
உரை ஆர்தொல் புகழ் - சொற்களில்  நிரம்பிய நித்ய கீர்த்தியையுடையனான
உத்தமனை - புரஷோத்தமனை
வர கரையாய் - வருமாறு கூப்பிடவேணும்

விளக்க உரை

வீட்டின் முற்றத்திலே காக்கை வந்திருந்துகொண்டு கத்தினால் இஷ்ட ஜநத்தின் வருகை நேருமென்று சகுன சாஸ்திரிகள் சொல்லுவதுண்டு; அஃதறிந்து ‘கரையாய் காக்கைப்பிள்ளாய்!” என்கிறாள். “காக்கை வாயிலுங் கட்டுரைகொள்வர் காரணாகருளக் கொடியானே!” (5-1-1). என்ற பெரியாழ்வார்திருமொழி இங்கு உணரத்தக்கது. ‘காக்காய்!’ என்னாதே ‘காக்கைப்பிள்ளாய்! என்றது கௌரவப்பேச்சு’ பகவத் விஷயத்தில் உபகாரம் செய்பவர்களை மாரியாதையுடனே துதித்துச்சொல்ல வேண்டுதல் மரபு என்பது இதனால் ஸூசிப்பிக்கப்படுமென்ப. கரைதல் - ஒலிசெய்தல்.

English Translation

Caw, Caw, Good Crow, Sir! Dark as a cloud, he;s spoken of as perfection personified! Caw his arrival!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்