விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி*  மெய்ம்மையே நின்று எம்பெருமானை,* 
    வாள்திறல் தானை மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*
    தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்*  பழமொழியால் பணிந்து உரைத்த,*
    பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்*  சித்தமும் திருவொடு மிகுமே  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாள் திறல் தானே – வாள் வலி கொண்ட சேனையையுடையவரும்
மங்கையர் தலைவன் – திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்
மானம் வேல் – பெருமைதங்கிய வேற்படையையுடைய வருமான
கலியன் – திருமங்கையாழ்வாருடைய
வாய் ஒலிகள் – ஸ்ரீஸூக்தியாய்

விளக்க உரை

வேட்டமாவது ஆசைப்பெருக்கம். இஹலோகத்து ஐச்வரியம் ஸ்வர்க்கலோகத்து ஐச்வரியம கைவல்ய மோக்ஷம் முதலானவற்றை விரும்பாமல் ஸ்வயம் ப்ரயோஜநமாகத் திருவடி பணியுமவர்கள் பக்கலிலே உண்மையாக்க் கடாக்ஷித் தருள்பவன் எம்பெருமான் என்கிறது முதலடி. வணங்கி – எச்சத்திரிவு, வணங்க என்றபடி. நின்ற எம்பெருமான், நின்றெம்பெருமான், தொகுத்தல் விகாரம். மெய்ம்மை நிற்றலாவது – விரைவில் அழியக் கூடியவைகளும் அற்பங்களுமான பலன்களைக்கொடுத்துவிடாதே சாச்வதமாய்ச் சிறந்த்தான பரம புருஷார்த்த்த்தை அளிப்பவனாக அமைதல். இத்திருமொழியில் பாசுரந்தோறும் ஒவ்வொரு பழமொழியை யிட்டு அருளிச்செய்திருக்கையாலே பழமொழியால் பணிந்துரைத்த பாட்டிவை எனப்பட்டது.

English Translation

This garland of proverb-songs by sharp-spear-wielding Mangai king kaliyan is praise offered of the feet of the Lord of Tulasi garland-wreath without any desire for immediate returns. By signing it, the heat will be filled with Bhakti and the wealth of joy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்