விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆழிஅம் திண்தேர் அரசர் வந்துஇறைஞ்ச*  அலைகடல் உலகம்முன் ஆண்ட,*
    பாழிஅம் தோள்ஓர் ஆயிரம் வீழ*  படைமழுப் பற்றிய வலியோ?*
    மாழைமென் நோக்கி மணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,*
    கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!*  குறுந்தடி? நெடுங்கடல் வண்ணா!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி – உருளையோடு கூடின
அம் தேர் – அழகிய தேரையுடையரான
அரசர் – ராஜாக்கள்
வந்து இறைஞ்ச – வந்து வணங்கும்படியாக
அலை கடல் உலகம் – அலைகடல் சூழ்ந்த உலகங்களை

விளக்க உரை

கடல் வண்ணனே! மாழைமான் மடநோக்கியான இப் பரகால நாயகியின் மேனி நிறத்தைக் கவர்ந்துகொண்டாய், இதுசெய்த நீ இவளை அடியோடு முடித்துவிடலாமே, இவளைச் சித்திரவதம் பண்ணவேணுமென்று கருதியோ உருவெளிப்பாட்டாலே நலிகின்றாய்! கார்த்தவீர்யார்ஜுநனுடைய ஆயிரந் தோள்களையும் (பரசுராமாவதாரத்தில்) கோடாலிப்படையினால் அறுத்துத் தள்ளின வீரத்தை நீ இவள் திறத்திலே காட்டுகின்றாய்போலும், இவளை மாய்ப்பதற்கு இத்தனை ப்ரயாஸங்கொள்ள வேணுமோ! தன்னடையே உடைந்துபோகக் கூடியதான கோழிமுட்டையைத் தகர்ப்பதற்குச் சிறியதடி தானும் வேணுமோ! எதுக்கு இவ்வளவு வீண் ப்ரயாஸங் கொள்ளுகிறாய் என்கிறாள்.

English Translation

O Lord of deep ocean hue! The strong king kartavirya Arjuna ruled the world worshipped by big charioted kings in yore. You wielded your battleaxe and felled his thousand arms. Is this a sign of your strength that you steal our fawn-eyed girl;s rouge and do not show yourself to her? Like the proverb, why use a stick to hatch a hen;s egg?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்