விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்*  பிறர் மக்கள் தம்மை*
    ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று*  இரப்பன் உரப்ப கில்லேன்*
    நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்*   நங்கைகாள்! நான்என் செய்கேன்?
    தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்*  தயிர்கடை கின்றான் போலும்!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரப்பன் - வேண்டிக் கொள்வனேயன்றி
உரப்ப கில்லேன் - வெருட்டி வார்த்தை சொல்லியறியேன்
நங்கைகாள் - பெண்பிள்ளைகாள்!
நானும் உரைத்திலேன் - (தாயாகிய) நானும் ஒன்று (சீறிச்) சொல்லியறியேன்,
நந்தன் - (தகப்பனாரான) நந்தகோபரும்

விளக்க உரை

கண்ணபிரான் செய்த சில தீமைகளைச் சில ஆய்ச்சியர் யசோதைப் பிராட்டி பக்கலிலே வந்து முறையிட, அதற்கு அவ்யசோதை ஆய்ச்சியரை நோக்கி கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு. (உங்களாயர்குலம் மானமுடைத்து) “கோளார் ஆபர் குலத்தவ ரிப்பழிகெட்டேன்! வாழ்வில்லை“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க. மாநம், ஊநம் - வடசொற்கள். (உரப்பகில்லேன்) “அஞ்சவுரப்பா ளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும்“ என்ற நாச்சியார் திருமொழியுங் காண்க. உரப்புதல் - அதட்டுதல். (நானுமுரைத்திலேன்) கீழ் “உரப்பகில்லேன்“ என்றதன் அநுவாதமே யிதுவும்.

English Translation

O Ladies! I could only plead with him and say, "Your cowherd-talk are respectable people. Please do not go about destroying the neighbours; daughter;s. I could not scold him, nor could Nandagopa do anything. If looks like he and a maiden are churning curds in the outhouse. Alas, what can I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்