விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீண்டான் குறள்ஆய் நெடுவான்அளவும்*  அடியார் படும் ஆழ் துயர்ஆய எல்லாம்,*
    தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்*  செல வைத்த பிரான் அதுஅன்றியும்முன்,*
    வேண்டாமை நமன் தமர் என்தமரை*   வினவப் பெறுவார் அலர், என்று,* உலகுஏழ்-
    ஆண்டான்அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீண்டாமை - அவர்களை ஸ்பர்சியாதபடி
நினைந்து - திருவுள்ளம்பற்றி
குறள் ஆய் - வாமணமூர்த்தியாகி
நெடு வான் அளவும் - பரம்பிய ஆகாசமெங்கும்
நீண்டான் - வளர்ந்தவனாய்,

விளக்க உரை

“இமையோரளவும் செலவைத்த பிரான்“ என்றளவளவும் வேறொரு வாக்கியமாகவும் யோஜித்தல் ஒருவகை, இந்த யோஜநையில், ‘நீண்டான் குறளாய் நெடுவானளவும்’ என்ற மட்டுமே த்ஜீவிக்ரமாவதார விஷயம் சொல்லுகிறது, அடியார்படுமென்று தொடங்கி மேல் வாக்கியத்தின் கருத்தாவது - தனக்கு அடிமைப்பட்டவர்கள் கீழ்க்காலங்களில் செய்த பாபங்களின் பலன்கைள அநுபவித்துத் தீர்க்க வேண்டாமல் “வாயினாற்பாடி மனத்தினாற் சிந்திக்கப் போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்“ என்கிறபடியே அவை தன்னடையே கழிந்தொழியுமாறு திருவுள்ளம் பற்றி அவர்களுக்கு ஞானபக்தி விரக்திகளை வளரச் செய்துகொண்டு போந்து அவர்களை நித்யஸூரி துல்யராக ஆக்கி வைக்கும் பெருமான் என்கை. (இமையோரளவும் செல) நித்ய ஸூரித்வ ப்ராப்தி பர்யந்தமாக -நித்ய ஸூரிகளாகவும் அய்விடும்படியாக என்றவாறு. வைத்த பிரானென்றது வைக்கும் பிரானென்றபடி. இனி மற்றொரு யோஜனை பதவுரையிற் காணத்தக்கது. மஹாபலியின் செருக்கினால் அடியார்கள் துயறற்றிருந்ததனால் அத்துயர் நீங்குமாறு வாமநமூர்தியாய் மாவலி வேள்வியிற் சென்று நெடுவானளவும் நீண்டவனாகி இமையோரளவும் செல்லும்படியாகத் திருவடிகளை நீட்டிவைத்த பிரான் என்றவாறு. தன்னடியார் திறத்தில் யமபடர்கள் ஒன்றும் ஆராய வொண்ணாதபடி எம்பெருமான் தனது அடியார்களைப் பாதுகாக்குந்திறம் மூன்றாமடியிற் கூறப்பட்டது. ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் “ஸ்வபுருஷமபிவீக்ஷய பாசறஸ்தம் வத்தி ய கில தஸ்ய கர்ணமூலே பரிஹா மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுர ஹமந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்“ என்றதும், திருமழிசைப்பிரான் நான் முகன் திருவந்தாதியில் “திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர் - இறைஞ்சியும், சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனும் தன், தூதுவரைக் கூவிச் செவிக்கு.“ என்றருளிச் செய்த்தும் இங்கு அறியத்தக்கன. (வேண்டாமை) “உயிரும் தருமனையே நோக்கும்“ என்ற பொதுவான ரீதியின்படி பாகவதர்களின் உயிரும் யமனுக்கு வசப்படவேண்டிய தாயிருக்கச் செய்தேயும் பொதுவிதியைப் பாகவதர் திறத்திலும் உபயோகப்படுத்த வேண்டாமையினாலென்றபடி. (என் தமரை நமன்தமர் வினவப்பெறுவாரலர்) வினவுதல் - தண்டனை செய்தலுக்குப் பரியாயம். ‘என்னுடைய பக்தர்கள் எவ்வகைப்பட்ட பிழைகளைச் செய்தவராயினும் அவர்களை யமபடர்கள் தண்டிக்க வுரியாரல்லர்’ என்று எம்பெருமான் கட்டளையிட்டு வைத்து ஜகத்பரிபாலனம் பண்ணுகிறானென்கிறது.

English Translation

The manikin came and grew, then took his foot up into the sky, that his devotees may never face despair. He is also the one who broke the law of karma and ruled, "Yama;s agents shall not touch our devotees", and thus established a reign over the seven worlds, And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்