விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தன்மகன்ஆக வன் பேய்ச்சி*  தான்முலை உண்ணக் கொடுக்க* 
    வன்மகன்ஆய் அவள் ஆவிவாங்கி*  முலைஉண்ட நம்பீ*
    நன்மகள் ஆய்மகளோடு*  நானில மங்கை மணாளா* 
    என்மகனே! அம்மம் உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல் மகன் ஆய் - வலிய ஆண்பிள்ளையாய்
அவள் ஆவி வாங்கி - அவளுயிரைக் கவர்ந்து
முலை உண்ட நம்பீ - அவளது முலையை உண்ட பிரானே!
நல் மகள் ஆய்மகளோடு - சிறந்த மகளாகிய நப்பின்னைப் பிராட்டிக்கும்
மணாளா - வல்லபனானவனே!

விளக்க உரை

நானில மங்கை - நானிலம் - நான்காகிய நிலங்களையுடையதெனப் பூமிக்குக் காரணப்பெயர். நால்வகை நிலங்களாவன - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்பன. காடும் காடுசார்ந்த இடமும் முல்லையெனப்படும், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியெனப்படும், நாடும் நாடுசார்ந்த இடமும் மருதமெனப்படம், கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்த லெனப்படும். மற்றொன்றாகிய பாலை நிலம் பிராணி ஸஞ்சாரத்திற்கு உரியதன்றென்று இங்கு விலக்கப்பட்டது. அது நீரும் நிழலுமில்லாத கொடுநிலம். பாலைக்குத் தனியே நிலமில்லை யென்பதும் நால்வகை நிலங்களும் தத்தம் தன்மை கெட்டவிடத்தே பாலையா மென்பதும் சில ஆசிரியர்கொள்கை. இப்பாட்டில் நானில மென்றது ஸாமந்யமாகப் பூமியைச் சொல்லக்கடவது.

English Translation

When the terrible ogress came disguised as a mother and gave you her beasts. You took her poison milk, and her life with it. O Bridegroom of the good cowherd-dame Nappinnai, and of Dame Earth! My Child, take suck! Auspicious one, take suck!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்