விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புரங்கள் மூன்றும்ஓர் மாத்திரைப் போதில்*  பொங்குஎரிக்கு இரை கண்டவன் அம்பின்*
    சரங்களே கொடிதுஆய் அடுகின்ற*  சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்*
    இரங்கு நீ எமக்குஎந்தை பிரானே!*  இலங்கு வெம்கதிரோன்தன் சிறுவா* 
    குரங்குகட்குஅரசே! எம்மைக் கொல்லேல்!*  கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொங்கு எரிக்கு - அக்நிஜ்வாலைக்கு
இரை கண்டவன் - இரையாக்கின ருத்ரனுடைய
அம்பில் - அம்புகளிற்காட்டிலும்
சரங்கன் - இந்த ராமபரணங்கள்
கொடிது ஆய் - கொடியவைகளாய்

விளக்க உரை

ஸ்ரீஜாம்பவானைப் புருஷகாரமாகக் கொண்டு ஸுக்ரீவமஹாராஜரைச் சரணம் புகுகிறார்கள் அரக்கர். முப்புரங்களையும் ஒரு மாத்திரைப் பொழுதில் எரித்த சிவபிரானது பாணத்திற்காட்டிலம் ராமபாணங்கள் கொடியவையாயிருக்கையாலே மிக் அஞ்சுகின்றோம், ஆதித்யனுக்குப் புதல்வனான ஸுக்ரீவ மஹாராஜனே! நீர் குரங்குகட்கெல்லாம் அரசரதலால் அக்குரங்குகளெல்லாம் நீரிட்ட வழக்காயிருக்கக் கடவனவாகையாலே அவை எங்கள்மேற் பாயாதபடி திட்டஞ்செய்வீரென்று ஸ்ரீஜாம்பவானைப் புருஷகாரமாகக் கொண்டு உம்மைத் தொழுகின்றோம், எம்மைக் கொல்லாதபடி இரங்கியருளவேணும் என்கிறார்கள்.

English Translation

We dread the Rama-bana, -fire arrows of Rama that are hotter than Siva;s arrow which burnt the three cities within the twinkling of an eye. O son of the sun Sugriva, with Jambavan by your side! O king of the monkeys! Our Lord! Pray have mercy. Do not us! We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்