விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தண்ட காரணியம் புகுந்து*  அன்று  தையலை தகவிலி எம்கோமான்*
    கொண்டு போந்து கெட்டான்*  எமக்கு இங்குஓர்  குற்றம்இல்லை கொல்லேல் குலவேந்தே*
    பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்*  பேசுகின்றதுஎன்? தாசரதீ,*  உன்-
    அண்ட வாணர் உகப்பதே செய்தாய்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொல்லேல் - (எங்களைக்) கொல்லா தொழியவேணும்
பெண்டிரால் கெடும் - ஸ்த்ரீசாபல்யங் காரணமாகக் கெட்டுப்போகின்ற
இக் குடி தன்னை - இந்த ராக்ஷஸஜாதியைப் பற்றி
பேசுகின்றது என் - பேசலாவது என்ன இருக்கிறது?
உன் அண்ட வாணர் - தேவரீருக்கு இஷ்டரான தேவதைகள்

விளக்க உரை

குற்றமற்றாரை நலியகில்லாத இக்ஷ்வாகு வம்சத்திற்கு அணிவிளக்காக அவதரித்த பிரானே! எங்களிராவணன், தனக்கு ஒருவகையான அபராதமும் செய்யாத உம்மிடத்திலே தானே வீண்பகை கொண்டு நெடுந்தூரங் கடந்து தண்டகாரணியத்திலே புகுந்து சிறிதும் ஈரநெஞ்சு இளநெஞ்சு இல்லாதவனாய் அழகிற்சிறந்த சானகியை அபஹரித்துக் கொண்டுவந்து சேர்ந்தான், இக்குற்றம் அவனொருவன் செய்த்தத்தனை யொழிய இதில் நாங்கள் கூட்டல்லோம். நாங்கள் அவனுடைய சேவகர்களாகையாலே அவன்கீழ்க் குடிவாழ்ந்த குற்றமொழிய ஸீதாபஹாரவிஷயத்தில் சிறிதும் நாங்கள் குற்றவாளிகளல்லாம். ஆகையாலே எங்களைக் கொல்லாதொழியவேணும். விஷயசாபல்யமே ஹேதுவாகக் கெட்டுப்போகின்ற இவ்விழிகுலத்தைப்பற்றி நாங்கள் என்ன சொல்லவல்லொம்! தேவரீருடைய அடியார்களான தேவர்கள் இராவணனால் நெருக்குண்டவர்களாதலால் அப்பாவி தொலைவது என்றே? என்று எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் மநோரதம் தலைக்கட்டிற்றாயிற்று. இவ்வளவே போதுமானது, இனி எங்களை ஒரு சரக்காக நினையா தொழியவேணும் என்று பிரார்த்திக்கிறார்களாயிற்று.

English Translation

O Tutelary king Darsarathi the day our Pitless king Ravana entered the Dandaka forest and brought sita, that very day he was doomed. We had no role in this, Pray do not kill us. Alas! this can is ruined by lust for women, what to speak of it! Your act is pleasing to the gods. We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்