விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒருநல் சுற்றம்*  எனக்குஉயிர் ஒண்பொருள்* 
    வரும்நல் தொல்கதி*  ஆகிய மைந்தனை*
    நெருநல் கண்டது*  நீர்மலை இன்றுபோய்* 
    கருநெல் சூழ்*  கண்ண மங்கையுள் காண்டுமே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெருநெல் - நேற்று
கண்டது - ஸேவித்தது
நீர்மலை - திருநீர்மலையிலே
இன்று - இன்றைக்கோ வென்னில்,
கரு நெல் சூழ் - கருவடைந்த பயிர்களால் சூழப்பட்ட

விளக்க உரை

எம்பெருமானை நேற்று திருநீர்மலையிலே கண்டோம், இன்று திருக்கண்மங்கையிலே காண்போமென்கிறார். திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் பக்கலிலும் திருக்கண்மங்கைப் பத்தராவிப் பெருமாள் பக்கலிலும் பரமபத ப்ரயாணத்திற்கு விடைபெற்றுக் கொள்ளுகிற னென்பது உட்கருத்து. எம்பெருமானொருவனே ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும் பரமபந்து - என்கிற ஸகலசாஸ்த்ர ஸாரப்பொருள்தோன்ற “ஒருநல் சுற்றம்“ என்றார். எனக்கு உயிர் -எம்பெருமான் ஸகல ஆத்மாக்களுக்கும் உயிராயிருக்கச் செய்தேயும் இவர் “எனக்கு உயிர்“ என்றதற்குக் கருத்து யாதெனில், உயிரை விட்டுப்பிரிந்த வஸ்து ஒரு கொடிப்பொழுதும் தரித்திருக்கமாட்டாதாப்போலே * அவனை விட்டகன்று உயிராற்றகில்லாத தம்முடைய உறைப்பைச் சொல்லுகிறபடி. ஒண்பொருள் - உலகத்தில் பொருளானது மரணத்தையுண்டாக்கும், அதாவது -த்ரவ்ய நிமித்தமாகப் பிராணனை விடுவார் பலருண்டே, எம்பெருமானாகிற பொருள் அப்படி அநர்த்த ஹேதுவன்றியே ஸத்தையை யுண்டாக்கும் பொருள் என்றபடி. (வருநல்தொல்கதி) முடிவாக ப்ராப்ய பூமியும் தானே யென்கை. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைத் திருநீர்மலையிற் சென்று பணிந்தோம் நேற்று, இன்று திருக்கண்ணமங்கையிற் சென்று பணிவோம் என்றாராயிற்று.

English Translation

My Lord and prince, my best friend, my very life and purpose, my forthcoming eternal home -we had Darshan of his feet in Nirmalai yesterday, Today we shall go and have his Darshan in Kannamangai surrounded by ripe paddy fields

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்