விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேடற்கு அரியவனை*  திருமாலிருஞ் சோலை நின்ற,*
    ஆடல் பறவையனை*  அணிஆய்இழை காணும்என்று,*
    மாடக் கொடிமதிள் சூழ்*  மங்கையார் கலிகன்றிசொன்ன,*
    பாடல் பனுவல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே!   (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாடம் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன - மாடங்களில் நாட்டின் கொடிகளோடு கூடின திருமதிள்களாலே சூழப்பட்ட திருமங்கை நாட்லுள்ளர்க்கு தலைவரான ஆழிவார்ருளிச்செய்த
பாடல் - பாடலாகிய
பனுவல் பத்தும் - இப்பத்துப்பாசுரங்களையும்
பயில்பார்க்கு - கற்பவர்களுக்கு
பாவங்கள் இல்லை - பாவமொன்று மில்லையாகும்.

விளக்க உரை

இத்திருமொழியின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில் “இவளாற்றாமை யிருந்தபடியால் அவனோடே அணைந்த்தல்லது தரிக்கமாட்டாள் போலே யிருந்தது, அணைத்துவிட வல்லளோ? அன்றிக்கே இங்ஙனே நோவுபடுமித்தனையோ? என்று சங்கித்துப் பின்னையும் அவனைக் கிட்டியேவிடுவளென்று அறுதியிட்டுத் தரிக்கிறாளாயிருக்கிறது“ என்றருளிச் செய்திருக்கக் காண்கை யாலே இப்பாட்டில் “அணியாயிழை காணுமென்று“ என்றதை நிச்சயபரமாகவே உரையிடவேண்டும். ஆனால், கீழ் ஒன்பது பாசுரங்களிலும் (சொன்ன விஷயத்தையே யன்றோ நிகமனப் பாரசுரத்தில் எடுத்துறைக்க வேண்டும், கீழெல்லாம் நிச்சமினறி ஸந்தேஹிப்பதாக் தானே உள்ளது, நிச்சயித்ததாக எங்குக் கிடைத்தது? என்று சிலர் சங்கிப்பர், இப்பாசுரத்தில்

English Translation

This is a garland often sweet songs by Kalikanri, king of pennon-fluttering-mansions-Mangai tract, on a mother;s desire to unite her jewelled daughter to the Garuda-riding Lord of Tirumalirumsolai, who is hard to attain by seekers. Those who master it will have no karmas

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்