விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உண்டு உலகுஏழினையும்*  ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
    கண்துயில் கொண்டுஉகந்த*  கருமாணிக்க மாமலையை,* 
    திண்திறல் மாகரிசேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    அண்டரதம் கோவினை இன்று*  அணுகும் கொல்? என்ஆய்இழையே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகு எழினையும் - ஸப்தலோகங்களையும்
உண்டு - (பிரளயகாலத்தில்) திருவயிற்றினுள் அடக்கி
ஒரு பாலகன் - ஒரு சிறுகுழவியாய்
ஆல் இலை மேல் - ஓராலிலையின்மீது
கண் துயில் கொண்டு - திருக்கண்வளர்ந்தருளி

விளக்க உரை

கருமாணிக்க மாமலையை - மாணிக்கம் கரிய நிறத்தன்றாதலால் இதனை இல்பொருளுவமை -(அபூதோபமை) யாகக் கொள்க. “அண்டர்“ என்று இடையர்க்கும் தேவர்க்கும் பெயர். ஆயிழை - ஆய்தல் - ஆராய்தல், நல்லதாகப் பார்த்தெடுத்த அணியப்பட்ட ஆபரணங்களையுடையவள் என்கை, வினைத்தொகையன்மொழி.

English Translation

The Lord who swallowed the seven worlds and slept as a child on a fig leaf is the Lord of the celestials. He is a dark mountain gem, residing in Tirumalirumsolai amid strong wild elephants. Will my tastefully jewelled daughter reach him today? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்