விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மூவரில் முன்முதல்வன்*  முழங்குஆர் கடலுள்கிடந்து,* 
    பூவளர்உந்தி தன்னுள்*  புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*
    தேவர்கள் நாயகனை*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கோவலர் கோவிந்தனை*  கொடிஏர்இடை கூடும்கொலோ!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூவரில் - த்ரிமூர்த்திகளுள்
முன் முதல்வன் - முக்கியனும்
முழங்கு ஆர் - (திரைக்கிளப்பத்தாலே கோஷித்தல் பொருந்திய
கடலுள் - திருப்பாற்கடலிலே
கிடந்து - திருக்கண்வளர்ந்தருளி

விளக்க உரை

திருமாலிருஞ்சோலையழகரோடே கூடும்படியான பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோவென்று ஆழ்வார் கவலைப்படுதல் இத்திருமொழிக்குப் பரமதாற்பரியம். மூவரில் முன் முதல்வன் - இந்திரனைக்கூட்டி மூவராக்கி, அம்மூவர்களிற் காட்டிலும் முபுமுதற் கடவுளாயிருப்பவன் என்றும் பொருள் கூறுவர். இரண்டாமடியில் “பூ வளருந்தி“ என்றும் பாடமுண்டு. புவனம் - வடசொல்.

English Translation

The first-cause Lord of the tri-murti, the Lord who reclines in the ocean, the Lord who made the universe on his lotus navel, then swallowed it, and remade it, the Lord of the celestials, the cowherd-Lord Govinda, resides in Tirumalirumsolai. Will my creeper-thin-waisted daughter blend with him today? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்