விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த*  பெருநிலம் அருளின் முன்அருளி,* 
    அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்*  அளந்த எம் அடிகள்தம் கோயில்,*
    கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்*  குறவர்தம் கவணிடைத் துரந்த,*
    மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கவண் இடை துரந்த - கல்லெறியுங் கயிற்றில் வைத்து எறிந்த
மணி -மணிகளினொளி
வளர்-மிகுதியாகக் காணப்பெற்ற
சாரல்-சுற்றுப்பக்கங்களையுடைய
மாலிருஞ்சோலை.-வணங்குதும்வா

விளக்க உரை

பிணிகள் வளரநின்ற சரீர சம்பந்தம் தொலையவேணமென்று பக்தர்கள் தன்னைத் துதித்துப் பிரார்த்திக்கும் பொருட்டு விசாலமான இந்நிலவுலகத்தைப் படைத்தருளினவனும், இப்படி தன்னதான விபூதியைக் கொள்ளைக்கொண்ட மாவலியின் செருக்கை யடக்குதற்காக அழகிய வாமநமூர்த்தியாகத் திருவ்வதரித்து மூவடிமண் இரந்து நீரேற்றுப் பெற்று நிமிர்ந்து மூவுலகமளந்து கொண்டவனுமான பெருமான் நித்ய ஸந்நிதிபண்ணி யிருக்கப்பெற்ற திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா மட நெஞ்சே! (கணிவளர் இத்யாதி) ‘கணி’ என்று சோதிடனுக்குப் பெயர், (கணிப்பவன் என்று காரணப்பெயர்) அத்தலத்தில் காலங் கூறுதற்குச் சோதிடரில்லை, வேங்கை முதலிய மரங்களை காலங்கூறுவனவாம். அந்தந்த மரங்கள் உரிய காலங்களிலே புஷ்பிக்கின்றமையால் ‘இதுஇன்னகாலம், இது இன்னகாலம்’ என்று அதுகொண்டே அனைவரும் காலமுணர்ந்து கொள்ளும்படி யிருத்தலால் ‘கணிவளர் வேங்கை’ எனப்பட்டது. அன்றியே, கண்ணி என்பது கணியெனத்தொக்கியிருப்பதாகக் கொண்டு, பூங்கொத்துகள் வளரப்பெற்ற வேங்கைமாமென்று உரைக்கலாமாயினும் அது அத்துணைச் சிறவாதென்க. கவண் -கற்களை யெறியுங்கயிறு. குறவர்கள் ரத்னங்களைக் கவண்களிலிட்டு எறிவதாகக் கூறியவிதனால் ரத்னங்கள் எளிதாகக் கிடைக்குந் தலம் இது என்றாம்.

English Translation

O Frail Heart! To accept the worship that we offer, -that we may be rid of the misery of bodily, existence, -He made this wide Earth with many sacred sports. He even came as a manikin and strode the Earth. He resides in Malirumsolai amid fall groves of Vengai trees that tell the season, and where gypsies hurl gemstones from their catapult. Come, let us offer worship there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்