விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வவ்வி துழாய்அதன்மேல்*  சென்ற தனிநெஞ்சம்,*
    செவ்வி அறியாது*  நிற்கும்கொல் நித்திலங்கள்*
    பவ்வத் திரைஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தெய்வச் சிலையாற்கு*  என் சிந்தைநோய் செப்புமினே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பவ்வம் திரை - கடலலைகளில்
நித்திலங்கள் உலவு -  முத்துக்கள் உலாவப்பெற்ற
புல்லாணி - திருப்புல்லாணியை
கைதொழுதேன் - கையெடுத்துத் தொழுதவளான
என் - என்னுடைய

விளக்க உரை

கீழ்ப்பாட்டிலுள்ள ;புள்ளினங்கள்!; என்ற விளியை இப்பாட்டிலும் வருவித்துக் கொள்க. தனது சிந்தை நோயை அத்தலையில் சென்று செப்புமாறு புள்ளினங்களைத் தூதுவிடுகிற ளென்க. தலைவன் பிரிந்து போகிறபோது தோளில் சாத்திக்கொண்டிருந்த திருத்துழாய் மாலையில் ஒரு தலையைப் பிடித்துக்கொண்டு என்னைவிட்டுத் தனியே சென்ற நெஞ்சானது இன்னமும் மீளாதே அவ்விடத்தே நிற்கின்றதே, இப்படியும் நிற்குமோ? திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று அழகாக ஆசைப்பட்டேன் அந்தோ!; அதற்குப் பலனாக, தீராத சிந்தைநோயையன்றோ நான்பெற்றது; இப்படி நான் மனோவியாதியடைந்து துடிக்கிறேனென்பதைப் புள்ளினங்காள்! கையும்; வில்லுமாய் நிற்கு மவர்க்குச் சொல்லுங்கோள் என்றாளாயிற்று.

English Translation

I joined my hands to worship the Lord of Pullani where waves heap pearls on the shore. Holding on to his Tulasi garland, my heart trailed after him, leaving me alone, and has remained there with him, ignoring my plight. Go tell my heart-ache to Deivachilaiyan, the wielder of the beautiful bow

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்