விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
    முருகுவண்டுஉன் மலர்க் கைதையின்*  நீழலில் முன்ஒருநாள்,*   
    பெருகுகா தன்மை என்உள்ளம்*  எய்தப் பிரிந்தான்இடம்,* 
    பொருதுமுந் நீர்கரைக்கே*  மணிஉந்து புல்லாணியே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முருகு உண் - தேனுண்ணப் பெற்ற
மலர் - பூவையுடைத்தான
கைதையின் - தாழையினுடைய
நீழலில் - நிழலிலே
முன் ஒருநாள் - முன்பொருநாள்

விளக்க உரை

நெஞ்சமே! இவ்விடத்திலிருந்து கொண்டு அப்பெருமானைச் சிந்தித்து உருகுவதனால் என்ன பலணுண்டாம்? நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம் முடைய சிந்தனை தீரவேணுமானாலும் இங்கிருப்பதில் பயனில்லை; புல்லாணியே போய்த் தொழவேணுங்காண். அவ்விடத்தில் வண்டு முதலிய திர்யக்ஜந்துக்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழ்கின்றனவாதலால் நாமும் அங்குப்போய் அபிமதம் பெற்றுக் களித்துவாழப் பெறலாமன்றோ என்கிறாள்.

English Translation

O Heart! Bow that-a-ways and arise. What use sifting here and melting? One day in the past, in the shade of the screwpine, teaming with nectar-drunken bees, he filled my heart with love and left. He resides in Pullani by the sea whose waves wash gems on the shore

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்