விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்இவர் மேனி மரகதத்தின்*  பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
    மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்*  வேதியர் வானவர் ஆவர் தோழீ,*
    என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி*  ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,* 
    அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்*  அச்சோ ஒருவர் அழகியவா!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏந்து இள கொங்கையும் - ஏந்தப்படுகின்ற இளைய முலைகளையும்
நோக்குகின்றார் - உற்றுப்பார்க்கின்றார்;
அன்னை என் நோக்கும் என்று - தாய் என்ன நினைப்பாளோ வென்று
அஞ்சுகின்றேன் - பயப்படுகிறேன்;
அச்சோ - ஆச்சரியம்;

விளக்க உரை

“மர்மங்களிலே கடாக்ஷியா நின்றார்; பார்த்தபார்வை ஒருகால் மாறவைக்கிறிலர்” என்பது வியாக்கியானம் ‘நம்மைப்பாங்காக அநுபவிப்பதற் குறுப்பான பக்தி இவ்வாழ்வார்க்கு முதிர்ந்ததேர்’ என்று எம்பெருமான் ஆராய்ந்தமையைச் சொல்லிற்றாகக் கொள்க. போகத்திற்குக் கொங்கை முதலிய உறுப்புகள் எப்படி இன்றியமையாதனவோ அப்படி பகவதநுபவத்திற்குப் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகள் இன்றியமையாதனவாதலால் ஸ்வாபதேசத்தில் அவற்றைப் பொருளாகக் கொள்க. அவர் நோக்கினவாறே நீ செய்ததென்? என்று தோழி கேட்க, அன்னையென்னோக்கு மென்றஞ்சுகின்றேன் என்கிறாள். அவர் பார்த்த பார்வை யெல்லாம் எனக்குப் பரமபோக்யமாகவேயிருந்தது; ஆனால் இந்த நிலைமையை நம்தாய் காண்பளேல் என்ன பாடு படுத்துவளோ வென்று அஞ்சி நிற்பதே என்கருமமாயிற்றுக்காண் என்கை. ‘நான் பதறி மேல் விழுவேன்; இதனைத் தாய்நோக்கினாளாகில் என்னாகுமோ வென்று அஞ்சி யொழித்தேன்’ என்றவாறு. (அன்னை) பெற்று வளர்த்துப் பெண் பிள்ளை யௌவன பருவத்தில் நாயகனிடத்துள்ள அன்புமிகுதியால் அவனிருப்பிடத்துக்குச் செல்ல வேணுமென்றும் மேல்விழுந்து அநுபவிக்க வேணுமென்றும் பதறுமளவில் படிகடந்து புறப்படுகை குலமரியாதைக்குப் பொருந்தாதென்று தடுப்பவள் உலகில் தாய் எனப்படுவாள்; ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றினவர்கள் பேற்றை விளம்பித்துப்பெறுதலில் காரணமில்லாமையாலே அதனை விரைவில் பெறவேணுமென்கிற ஆவலைப் பிறப்பித்து அதனால் படிகடந்து நடக்க வேண்டிவந்த வளவில் இது ப்ரபந்நர் குடிக்கட்டுப்பாட்டுக்குச் சேராததென்று விலக்கி ‘எம்பெருமான் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்கவேணம்.’ என்றுசொல்லித் துடிப்பை அடக்கப் பார்க்கிற நம பதத்திற்கூறப்பட்ட உபாய அத்யவஸாயமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தாய் என்பதாக ஸ்வாபதேசத்திற் கொள்ளவேணுமென்பது ஆசார்யஹ்ருதயத்தில் விரியும்; ஆகவே, இங்கு “அன்னை என்னோக்கு மென்றஞ்சுகின்றேன்” என்றது – உபாயாத்யவஸாயத்தில் ஊற்றத்தாலே பதறுதல் தவிர்ந்தேன் என்றவாறாம். அச்சோவொருவரழகியவா! = ‘அச்சோ’ என்பது ஆச்சரியக் குறிப்பிடைச்சொல்; எங்கும் என்றுங் கண்டறியாத அழகுடன் ஒருவர் என் கண்ணுக்குத் தோற்றுகிற இவ்வாச்சரியம் வாசரமகோசரம் என்றவாறு. திருநாகை எம்பெருமானாகிய ஸௌந்தர்யராஜனை ஒரு வாறாகக் குறிப்பிடுவதாகவுங் கொள்க.

English Translation

Oh, Sister! His face was a golden hue, the emerald pendant on his chest struck a flash of lightning. Was he some Vedic seer, chanter of the saman? Or was he a good on Earth? He ran his eyes over me, he saw my slender waist, then my risen tender breasts, -I dread that look on my mother's face, -Aho, was he beautiful.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்