விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கவளமா கதத்த கரி உய்ய*  பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
    துவள*  மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட*  சுடுபடை துரந்தோன்,*
    குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்*  கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
    திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கவளம் - கவளங்கொள்ளுமியல் புடையதும்
மா கதத்த - மிக்க மதத்தையுடையதுமான
கரி - கஜேந்திரன்
பொய்கை - ஒரு பொய்கையிலிருந்த
கராம் - முதலையினாலே

விளக்க உரை

இத்திருப்பதியில் வாழ்பவர்கள் வேத வேதாந்தங்கள் கைவந்தவர்களென்றது கீழ்ப்பாட்டில். அந்தவேதத்தின் முக்கிய தாத்பரியத்தைச் செய்கையில் அதற்குநேரும் இடையூறுகளை யொழித்து அக்கைங்கரியத்தைத் தானே கைக்கொண்டருளுமவன் எம்பெருமானென்பதை உணர்த்து மாறு ஸ்ரீகஜேந்திராழ்வானது வரலாற்றை இப்பாசுரத்தி லெடுத்துரைக்கின்றார். கவளம் என்று யானையுணவுக்குப்பெயர் ‘மாகதத்த’ என்னும் விசேஷணமும் சாதிக்குரியதாக இட்டதாம். கதம் – கோபம். கரி – வடசொல். ‘கரா’ என்றும் ‘கராம்’ என்றுமு் முதலைக்குப் பெயர். கொள – கொள்ள. துவள – ‘மிகவருந்திப் பறிக்கப்பட்ட இப்பூவை எம்பெருமானது திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பெறுகின்றிலோமே!’ என்றுவருத்தங் கொள்ள. நீர்ப்பூவளமும் நகர்வளமும் சொல்வன பின்னடிகள்.

English Translation

The rutted elephant, caught in the jaws of the lake-crocodile wept an a contemplated the Lord in his heart when Lo! The Lord appeared in the sky, over the lake and sliced the crocodile's jaws with his sharp discus! His standing form adoms the temple; of Tirukannangudi surrounded by jewelled mansions, high walls, ripe paddy fields, and water tanks filled with blue lilies, white lilies, red lilies, lotuses and Neidal flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்