- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருப்பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொள்ளுகின்ற வ்யூஹமூர்த்தியே திருக்கண்ணங்குடியில் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளியுள்ள எம்பெருமானென்கிறார். வங்கம் – கப்பல்; கடலுக்குச் சிறப்பாகக் கூறும விசேஷணமிது, இனி இச்சொல்லை வடசொல்லின் சிதைவாகக்கொண்டால் அலை என்று பொருள் கொள்ளலாம். அங்கம் ஆறு = சீக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு. ஐந்துவேள்விகளாவன :– ப்ரஹ்மயஜ்ஞம், தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யஜ்ஞம் என்பனவாம். வேதமோதுதல் பிரமயஜ்ஞம்; பலியீதல் பூதயஜ்ஞம்; பித்ருக்களையுத்தேசித்துத் தர்ப்பணம்விடுதல் பித்ருயஜ்ஞம்; விருந்தினர்க்கு உணவளித்தல் மநுஷ்யயஜ்ஞம். நால்வேதமாவன :– ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்பன: தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் எனவிவை யென்றலுமுண்டு. அருங்கலை யென்றது – வேதங்களுக்கு உபப்ரும்ஹணமாகவுள்ள ஸ்மிருதீதி ஹாஸ புராணங்களை யென்ப. ஞானமனுட்டானமிவை நன்றாகவே யுடையரான மஹான்கள் வாழுமிடம் திருக்கண்ணங்குடி யென்றதாயிற்று. துளக்கமில்மனத்தோர் = துளக்கமாவது கலக்கம்; அஃதில்லாத மனமுடையவர்களென்றது நல்ல விவேகமுடையவர்களென்றபடி : ‘நாம் செய்கிற கருமங்கள் நமக்கு ஸாதநமல்ல; எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையே நமக்கு உஜ்ஜீவநோபாயம்’ என்னும் அத்யவஸாயத்தில் குலைதலற்றவர்களென்கை.
English Translation
Deep in the wide ocean, on a white serpent bed coil my Lord,- he is seen reclining, Bearing a white conch in hand and a beautiful lotus on navel of dark blue hue. Pure-hearted Vedic seers worship his standing form chanting the Mantras of sacred works, -Six Angas, Five Prasnas, Four Vedas, -and feeding three altar fires in Tirukkannangudi.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்