விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணன்ஊர்*  கண்ணபுரம் தொழும் காரிகை,* 
    பெண்மைஎன் தன்னுடை*  உண்மை உரைக்கின்றாள்,*
    வெண்ணெய்உண்டு ஆப்புண்ட*  வண்ணம் விளம்பினால்,* 
    வண்ணமும்*  பொன்நிறம் ஆவது ஒழியுமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உண்மை - (வியாமோஹத்தின்) உண்மையை
உரைக்கின்றாள் - வாய்விட்டுச் சொல்லுகிறாள்;
பெண்மை என்? - இஃது என்ன பெண்மைக்குணம்?
வெண்ணெய் உண்டு - (அவன் வெண்ணெயை (க்களவாடி) அமுதுசெய்து
ஆப்புண்ட - (தாம்பினால்) கட்டுண்ட

விளக்க உரை

வண்ணமும் பொன்னிறமாவதொழியுமே = பெண்டிர்க்குப் பிரிவாற்றாமையினால் தோன்றும் பசலைநிறம் பொன்னிறமெனப்படும்; அது வ்யஸநத்திற்கு ஸூசகம்; அந்த நிறம் ஒழிந்த தென்றல் ஸந்தோஷமுண்டாயிற் றென்றபடியாம். அவனுடைய திருக்குணங்களைப் பிறர் ஏச்சாகச் சொன்னால் ‘கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியமாகப்பெற்றான், பற்றியுரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோ?’ என்னும் மெய்யன்புடையளாதலால் அந்த திவ்ய கீர்த்தி செவிப்பட்ட மாத்திரத்திலும் அவனோடு தனக்குக் கலவி நேர்ந்ததாகவே கொண்டு வைவர்ணியம் மாறப்பெற்றாளென்க.

English Translation

She salutes the Lord's abode of Kannapuram, she speaks openly about her beauty and her femininity. Her golden colour drains from her checks and breasts when she hears of how her krishna stole butter and was punished!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்