விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்ணினை பண்ணில் நின்றதுஓர் பான்மையை*  பாலுள் நெய்யினை மால்உருஆய் நின்ற- 
    விண்ணினை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  வேள்வியை விளக்கின்ஒளி தன்னை*
    மண்ணினை மலையை அலை நீரினை*  மாலை மாமதியை மறையோர் தங்கள்- 
    கண்ணினை*  கண்கள் ஆரளவும் நின்று*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளங்கும் சுடர் சோதியை - விளங்குகின்ற பரஞ்சோதிமயமான திருமேனியையுடையவனும்
வேள்வியை - யாகஸ்வரூபியும்
விளக்கின் ஒளி தன்னை - விளக்கொளிபோலே ஸ்வயம் ப்ரகாசனும்
மண்ணினை - பூமிபோலே எல்லாவற்றையும் பொறுத்திருப்பவனும்
மலையை - மலைபோல் ஒருவராலும் அசைக்க வொண்ணாதவ

விளக்க உரை

உரை:1

பசுர் வேத்தி சிசுர் வேத்தி வேத்தி காநரஸம் பணீ” (ஸங்கீதத்தின் இனிமைளை நாற்கால் விலங்கு அறியும், குழந்தை அறியும், பாம்பு அறியும்) என்கிறபடியே பண் அனைவர்க்கும் ஸ்ப்ருஹணீயமாயிருப்பது போல எம்பெருமானும் விரும்பத்தக்கவன் என்றபடி. (பண்ணில் நின்றதோர் பான்மையை) ‘பண்ணினை’ என்று கீழ்ச் சொன்னதன் கருத்தே இதற்குமாயினும் எம்பெருமானுடைய போக்யதையைப் பன்னியுரைக்கின்றபடி. இதில் புநருக்திதோஷம் புகாது. (பாலுள் நெய்யினை.) 1. “கறந்த பாலுள் நெய்யேபோல் இவற்றுளெங்கும்” என்கிறபடியே பாலினுள்ளே உறைந்திருக்கும் நெய்போலே கரந்த சிலிடந்தொறுமிடந்திகழ் பொருடொறுங் கரந்தெங்கும் பரந்துளன் என்கை. (மாலுருவாய் நின்ற விண்ணினை.) நித்ய விபூதி நிர்வாஹகனாயிருக்குமவனென்கை. ‘மாலுருவாய் நின்ற’ என்றது விண்ணுக்கு விசேஷணம்; பரமபதமானது த்ரிபாத்விபூதி யென்னப்படும்; என்கிற புருஷஸூக்தத்தின்படியே இந்த விபூதியில் எல்லா பூதங்களும் இவனுக்கு நாலத்தொன்று என்னும்படி அறபமாயிருக்கும்; பரமாகாசத்தில் அவனுடைய நித்யமான விபூதி த்ரிபாத் என்னும்படி மும்மடங்காயிருக்கும்; ஆக இந்தப் பரப்பைத் தெரிவிக்கும் இவ்விசேஷணம். (விளங்கும் சுடர்ச் சோதியை.) அங்கே அளவற்ற தேஜோ ரூபமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனாய் நிற்பவன். (வேள்வியை.) யஜ்ஞஸ்வரூபி; ஸகல கருமங்களாலும் ஆராதிக்கப்படுமவ னென்றவாறு. (விளக்கினொளிதன்னை.) விளக்கொளியானது தன்னைத்தானே பிரகாசிப்பித்துக் கொண்டு பிறவற்றையும் பிரகாசம் படுத்துமா போலே ஸ்வபர ப்ரகாசகன். (மண்ணினை.) பூமியானது ‘ஸர்வம்ஸஹா’ என்ற பெயர்க்கு ஏற்ப எல்லாவற்றையும் பொறுத்திருப்பது போல, செய்தார் செய்த குற்றங்களை யெல்லாம் பொறுப்பவனென்கை. (மலையை.) இப்படிப்பட்ட தன் ஸ்வபாவம் ஒருவரால் சலிப்பிக்கவொண்ணாமே உறுதிகொண்டிருப்பவ னென்கை. (அலைநீரினை.) பள்ளமான விடங்களிலே பாயுமே தண்ணீர்; குஹப்பெருமாள், விதுரர், மாலாகாரர் போல்வாரிடத்தும் பாயுந்தண்ணீர் எம்பெருமான். (மால்.) இன்பரிடத்தில் வ்யாமோஹமே வடிவாயிருப்பவன்.

உரை:2

இசையாகவும், இசைத் தன்மையாகவும் உள்ள எம்பெருமான் பாலில் மறைந்துள்ள நெய் போன்றவன். வானவன்; ஒளிமேனியானவன்; வேள்வியானவன்; ஒளிவிளக்கானவன்; பூமியைப் போல் எல்லோருக்கும் ஆதாரமாய் மலைபோல் நிலையானவன். அலை நீர் போல் கலந்து பரிமாறுபவன். ஞானத்தைத் தருபவன். அந்தணர்கள் கண்களான இவனை என் கண்கள் ஆர, நான் திருக்கண்ண மங்கையில் கண்டு கொண்டேன்.

English Translation

The sweet Pann, the sweetness of Pann, the Ghee in milk, the adorable form in Vaikunta, the radiant form, the sacrifice, the light of the lamp, the Earth, the mountains, the deep waters, the rising Moon, dear as eyes to Vedic seers, -formy fill, I sought and found him Kannamangai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்