விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை*  இம்மையை மறுமைக்கு மருந்தினை,* 
    ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்  ஐயனை*  கையில்ஆழி ஒன்றுஏந்திய   
    கூற்றினை*  குரு மாமணிக் குன்றினை  நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை* 
    காற்றினை புனலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஐயனை - ஸ்வாமியும்
கையில் - திருக்கையில்
ஒன்று ஆழி - ஒப்பற்ற திருவாழியை
ஏந்திய - தரித்துக்கொண்டுள்ளவனும்
கூற்றினை - (எதிரிகட்கு) யமன் போன்றவனும்,

விளக்க உரை

நித்யாநந்தத்தினால் காளைபோல் மேனாணித்திருக்குமவன்; இமயமலையில் திருப்பிரிதியென்னுந் திருப்பதியிலிருக்கு மிருப்பைக்காட்டி என்னை வசப்படுத்திக் கொண்டவன்; இஹலோகத்துப் பலன்களாகிய க்ஷேத்ரபுத்ர களத்ராதிகளையும் ஸ்வர்க்க லோகத்துப் பலன்களையும் விரும்புவார்க்கு அளிக்க வல்லவன்; இதற்குறுப்பாக ஸர்வ சக்தியுக்தன் : தான் விரும்பின வ்யக்திகளைப் பரமபதத்திலே கொண்டு வைக்க வல்லவன்; கையிலே திருவாழி கொண்டு வியாபாரிக்குந் திறத்தினால் எதிரிகட்கு யமன் போன்றவன்; சிறந்த நீலமணிமயமான பர்வதம் போன்ற வடிவையுடையவன்; திருநின்றவூரிலே முத்துத் திரள்போலே தாபஹரமான வடிவுகொண்டெழுந்தருளியிருப்பவன்; ஸ்பரிசத்தாலே பரமசுகமளிக்குங் காற்றுப்போலே விரும்பத் தகுந்தவன்; தண்ணீர்போலே உயிர்தரி்ப்பதற்கு ஹேதுவாயள்ளவன்; ஆக இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையிற் காணப்பெற்றேன்.

English Translation

The bull, the Lord of celestials, the medicine for the life here and hereafter, the companion for the journey beyond this world, the wielder of the fierce discus, the radiant gem-mountain, the Lord of Tiruninravur, the heap of peals, the wind, the waters, - I sought and found him in Kannamangai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்