விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு*  கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*  
    நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன*  நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*
    மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு*  வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*  
    அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வயல்கள் தோறும் மடைகள் பாய - கழினிகளிலெல்லாம் நீர்பாயும்
அலைத்து வரும் - அலையெறிந்து கொண்டு வாரா நின்றுள்ள
பொன்னி - காவேரியினால்
வளம் பெருகும் - செழிப்பு மிகப்பெற்ற
செல்வத்து - சிறப்பையுடைய

விளக்க உரை

உரை:1

நிலா - நிலா; “குறியதன் கீழ் ஆக்குறுகலும்” என்பது நன்னூல். (மலைத்திகழ் இத்யாதி.) ஸஹ்ய பர்வதத்தினின்று உத்பத்தியாகிப் பெருவெள்ளமாய்ப் பெருகிவரும் விசையில் குறிஞ்சி நிலக் கருப்பொருளாகிய சந்தனம் முதலியவற்றைப் புரட்டியடித்துக் கொண்டுவருங் காவேரி தான் கொண்ர்ந்துவரும் சந்தனம் முதலியவைகள் கழனிகளில் நீர்மடை வழியாகப் பாய்தலினால் மிக்க வளத்தை யுண்டாக்கிப் பெருஞ் சிறப்பை இத் திருவழுந்தூர்க்கு விளைக்குமென்க. “மலைத்தலைய கடற்காவிரி, புனல் பரந்து பொன் கொழிக்கும்” என்கிறபடியே தான் பெருகும் பொழுது பொன்னைக் கொழித்துக் கொண்டு வருதலால் காவேரிக்குப் பொன்னியென்று பெயர். இ -உடைமைப் பொருள் காட்டும் பெண்பால் விகுதி. எம்பெருமான் தான் பெருந்துயரத்தினால் வருந்துகின்ற அன்பருள்ள விடங்களிற் சென்று பாதுகாப்பது போலவே இக்காவேரியின் வெள்ளமும் வேண்டுமடங்களிலெல்லாம் வந்து பாயமென நயந்தோன்றுமாறு இங்கு அருளிச் செய்யப்பட்டுள்ளமை உய்த்துணரத்தக்கது.

உரை:2

உடற்கட்டும் மதமும் கொண்ட கஜேந்திரன் பொய்கையில் புகுந்ததும், முதலை அதன் காலைப் பிடிக்கவே. துன்புற்ற அது, "சந்திரனை ஒத்த ஒளிச்சுடரே!" என்று இறைவனைக் கூப்பிட்டது. அதன் துயரைப் போக்கிய தூயவன் ஆன நித்திய சூரிகள் தலைவன் திருவழுந்தூரில் எழுந்தருளியதைக் காணுங்கள். இவ்வூரில் ஓடும் காவிரி மலைச் சந்தனம், அகில், பொன், மணி ஆகியவற்றைத் தள்ளிக் கொண்டு மடைகளில் புகுந்து வயல்களில் பாய்ந்து வளம் பெருக்கும்.

English Translation

Then in the yore the elephant devotee in the lake fell to the tight grip of the crocodile-jaws, and called out "Lord help me, Moon-like radiance!", when the Lord came and rid him of misery. Mountain spring washes out fragrant wood and gold, gems and flows down the plains and fields as Kaveri river beautiful and ere green, Ani-alundur where resides the Lord of all gods!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்