விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!*  கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா* 
    இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!*  எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்* 
    பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து*  ஐவர்- 
    அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடல் போல் ஒளி வண்ணா - கடல் போன்று அழகிய வடிவையுடையவனே!
முன் - முன்பொருகால்
ஆன் விடை ஏழும் இறுத்திட்டு வென்றாய் - ஏழு எருதுகளையும் முறித்துவென்றவனே!
எந்தாய் - எம்பெருமானே!
முன் - முற்காலமே தொடங்கி

விளக்க உரை

உன் பக்கலில் நல்லெண்ணங் கொண்டு வாழ்ந்து போகலாமாயிருக்க அது செய்யாதே தீய புத்தியைக் கொண்ட கம்ஸன் அஞ்சி யொழியும்படி அவனைச் சினந்து நிக்ரஹித்தவனே; நப்பின்னைப் பிராட்டியோடு கலவிசெய்ய இடையூறாயிருந்த ஏழு விருஷபங்களையும் வலியடக்கி அப்பிராட்டியைத் தழுவிக் கொண்டவனே!, பூலோகம் புவர் லோகம் ஸுவர்லோகம் மஹோலோகம் ஜநலோகம் தபோலோகம் ஸத்யலோகம் ஆகிய மேலேழுலகங்களையும் நிர்வஹித்து நடத்துமவனே! பல்லைக்கடித்துக் கொண்டு பொறுத்திருப்போ மென்றாலும் பொறுத்திருக்க முடியாத துக்காநுபவங்களை நான் அடைந்திடும்படி பஞ்சேந்திரியங்கள் என்னுள்புகுந்து ஹிம்ஸிக்க, அந்த ஹிம்ஸைகளுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே வந்து புகுந்தே னென்றாராயிற்று. போகம் – மென்ற வடசொல்விகாரம்; அநுபவம்; துன்பங்களின் அநுபவமென்பது அர்த்தாத் ஸித்தம். நுகர்வான் – நான் அநுபவிக்கும்படி செய்தவதற்காக.

English Translation

O Dark-hued Lord! O Radiant ocean-hued Lord! You struck fear and anger in Kamsa's heart! You destroyed seven bulls in a contest! You become the seven worlds in the yore! I fear the unbearable miseries the five senses heap upon me. O Lord of western Alundur, my Master, I have attained your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்