- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
குன்றால் மாரி தடுத்தவனை* குல வேழம் அன்று-
பொன்றாமை* அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*
அன்று ஆவின்நறுநெய்* அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்-
நின்றானை* அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.
காணொளி
பதவுரை
குன்றால் - கோவர்த்தந கிரியைக்கொண்டு
மாரி - பெருமழையை
தடுத்தவனை - தடை செய்தவனும்
குலம் வேழம் - சிறந்தகுலத்துப் பிறந்த கஜேந்திராழ்வான்
பொன்றாமை - (முதலைவாய்ப்பட்டு) முடிந்து போகாமல்
விளக்க உரை
பொன்றாமை – பொன்றுதல் – அழித்தல். அதனக்கு அருள்செய்த – அதுதன் கையிற் பறித்து வைத்துக்கொண்டிருந்த தாமரைப்பூவைத் திருவடிகளிலே ஸமர்ப்பிக்கப் பெற்றுக் கொள்வதாகிற அருளைச் செய்தவனென்க. திருவாய்ப்பாடியின் ஸ்தானத்திலே திருவழுந்தூரைத் திருவுள்ளம் பற்றினானென்பது மூன்றாமடியின் கருத்து.
English Translation
The Lord who lifted a mount against a hailstorm, the Lord who saved the distressed elephant, the Lord who emerged victorious in war, the Lord who ate butter in stealth, resides in beautiful Alundur, I have seen him today.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்