விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மீது ஓடி வாள் எயிறு மின் இலக*  முன் விலகும் உருவினாளைக்* 
    காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த*  கைத்தலத்தா! என்று நின்று*
    தாதோடு வண்டு அலம்பும்*  தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி* 
    போதோடு புனல் தூவும் புண்ணியரே*  விண்ணவரின் பொலிகின்றாரே*     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாள் எயிறு - ஒளி பொருந்திய கோரப்பல்லானது
மீது ஓடி - மேல் முகமாக வளர்ந்து
மின் இலக - மின்னல்போல் விளங்க
முன் விலகும் உருவினாளை - முன்னே வந்து நின்ற உருவத்தை யுடையளான சூர்ப்பணகை யினுடைய

விளக்க உரை

எவ்வகையான இடையூறுக்கும் நிலமன்றியே நலமந்த மில்லதோர் நாடாகிய பரமபதத்திலே யிருந்துகொண்டு பகவதாராதநம் செய்வதில் அருமையொன்றுமில்லை; இருள் தருமா ஞாலமாகிய இந்நிலத்திலிருந்துகொண்டு பகவதாராதநம் செய்வதே அரிதாதலால் அங்ஙனஞ் செய்பவர்கள் நித்தியஸூரிகளிற் காட்டிலும் மேம்பட்டவர்களேயாகக் குறையில்லை யென்க. பாற்கடல் பாம்பணைமேல் பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே” என்ற திருவிருத்தமும் நோக்கத்தக்கது.

English Translation

The Lord who cut the nose and ears of the fierce Rakshsai Surpanakha who appeared before him resides amid bee-humming fragrant groves in Tirucherai. Those who worship him with flowers, pure water and chants are wortheir than the celestials, see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்