விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்*  தோன்றல் வாள் கலியன்*  திரு ஆலி- 
    நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்*  நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-
    சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்*  தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்* 
    பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூ பொழில் - பூஞ்சோலைகளையுடைய
மங்கையர் தோன்றல் - திருமங்கை நாட்டிலுள்ளவர்கட்குத் தலைவரும்
திரு ஆலி நாடன் - திருவாலி நாட்டுக்குப் பிரபுவானவரும்
வாள் - வாளை யுடையவருமான
கலியன் அவன் - அத் திருமங்கையாழ்வார்

விளக்க உரை

இத் திருமொழிகற்றார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது. கீழ் ஆறாம்பத்தில் “கண்ணுஞ்சுழன்று” என்ற திருமொழி தொடங்கி இத் திருமொழியளவாக நூறு பாசுரங்கள் கொண்ட பத்துத் திருமொழிகளால் திருநறையூர்த் திருப்பதியை மங்களா சாஸநம் செய்தாராயிற்று. திருநறையூர் நம்பிக்கு அஸாதாரணமாகவுள்ள ஒரு தன்மை இங்குத் தொனி்ககின்றது காண்மின்; - திருநறையூர்க்கு ‘நாச்சியார் கோயில்’ என்னுந் திருநாமமே மிகப்ரஸித்தமாக வழங்கிவருவது.. திருவீதிப் புறப்பாடுகளில் நாச்சியார் முன்னே யெழுந்தருளவும் நம்பி பின்னே யெழுந்தருளவுமான ஒரு ஸம்ப்ரதாயமும் காண்கிறோமங்கு. எம்பெருமான் தன்னுடைய மேன்மையை அடக்கிக்கொண்டு தன்னடியார்க்கு மேன்மையைப் ப்ரகாசப்படுத்துகிற திருப்பதி இதுவாதலால், இத்திருப்பதியின் பாடலைத் தலைக் கட்டுகின்ற இப்பாசுரத்தில் எம்பெருமானுடைய அத்தன்மை விளங்க, பாசுரம் தொடங்கும் போதே (மற்ற பலச்ருதிப் பாசுரங்களிற் போலல்லாமல்) ஆழ்வார் தம்முடைய திருப்புகழை முற்கொண்டு பேசுகிறபடி காண்மின். “தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் தோன்றல் வாட்கலியன் திருவாலி நாடன்” என்னுமளவும் ஆழ்வார் தம்முடைய திருநாம ஸங்கீர்த்தநமேயிறே.

English Translation

This garland of songs sung by the Lord of Nectar-groves-around-Tirumangai ruler, wielder-of-the-sharp-spear, Kalikanri, on the lotus feet of Naraiyur Lord, singing, falling and dancing in ecstacy, -those who master it, ye among devotees, -those who master if, ye among devotees, Learn to sing in song, offer it as worship. Pain and sorrow will never come to you again.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்